Saturday, 28 December 2013

திருமலை தரிசனம்

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏழுமலையானை திருமலைக்கே சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது !!! (பலமுறை சென்னை வேங்கட நாராயணா ரோட்டில் தரிசித்தமையால்...) இரண்டாவது முறையாக தி.நகர்  பர்கிட் ரோட்டில் அமைந்துள்ள ஆந்திர மாநில சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து காலை 5 மணிக்கு சரியான நேரத்தில் புறப்பட்டாயிற்று.  திருத்தணி, புத்தூர் வழியாக திருப்பதி. வழியில் புத்தூரில் ஆந்திர மாநில சுற்றுலா உணவகத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு திருப்பதி நோக்கி பயணமானோம்.  திருப்பதி RTC பேருந்து...
Read More

Saturday, 7 December 2013

கோவை - ஈஷா - மருதமலை - உதகை - முதுமலை பயணம் - 2

 கோவைப் பயணத்தை முடித்துக் கொண்டு,  மாருதி ஓம்னி வண்டியில் எங்களுடைய உதகை பயணத்தை தொடங்கினோம். வழியில் மேட்டுப் பாளையத்தில் நண்பரின் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, காலை உணவருந்தியபின் மலைப் பாதையில் குன்னூர் வழியாகப் பயணமானோம். வழியெங்கும் மலைகளின் அரசி பூமியில் பச்சைப் பட்டுடுத்தி, சற்றே மழையுடன் வரவேற்றாள்.  சரியாக 12 மணியளவில் நாங்கள் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்த Hotel Astoria Residency - க்கு வந்து...
Read More

Thursday, 5 December 2013

எழுத்தாளர் பா ராகவன் அவர்களின் மனம் கவர்ந்த 100 நூல்கள்

எழுத்தாளர் பா ராகவன் அவர்களின் மனம் கவர்ந்த 100 நூல்கள் என்னும் தலைப்பில் அதிஷா அவர்கள் அவரின் வலைப் பதிவினில் பகிர்ந்திருந்தார். அந்தப் பட்டியல் அப்படியே இங்கு தரப்பட்டுள்ளது. (நன்றி: அதிஷா, பா. ரா) நூறு நூல்களின் பெயர் மட்டுமின்றி அதன் சிறு குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள நூல்கள் தரவரிசைப் படி அமைக்கப்படவில்லை. சென்னை புத்தக காட்சி 2014 சமயத்தில் இந்த நூல்களின் பட்டியல் கிடைத்துள்ளது. கண்டிப்பாக பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையுடன், 1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப்...
Read More

Wednesday, 4 December 2013

சென்னை புத்தக கண்காட்சி - 2014

சென்னை புத்தக கண்காட்சி - 2014 இடம்:  YMCA மைதானம் No.333, அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 600 035 நாள்: 10, ஜனவரி – 22, ஜனவரி, 2014 இம்முறை பல போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாக பபாசி இணையதளம் அறிவிக்கின்றது. போட்டிகளின் விபரங்கள், 1. சிறுகதை போட்டி  2. குறும்படப்  போட்டி 3. ஓவியப் போட்டி 4. பேச்சுப் போட்டி  மேலும் விபரங்களுக்கு http://www.bapasi.com...
Read More

கோவை - ஈஷா - மருதமலை - உதகை பயணம் - 1

அமெரிக்க திரும்பல் (US  Return) நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை நோக்கி காலை 7 மணிக்கு துரந்தோ ரயிலில் 5 நண்பர்கள் புறப்படலானோம். இந்த ரயில் மதியம் 2 மணிக்கு கோவையை சென்றடைகிறது.   துரந்தோ ரயிலில் பயணிப்பது இதுவே முதல் முறை. இது ஒரு இடை நில்லா ரயில். முழுவதும் குளிரூட்டப்பட்ட, உட்கார்ந்து மட்டுமே செல்லக் கூடிய ரயில். விமானப் பயணம் போலவே, ரயிலில் ஏறியதிலிருந்து உபசரிப்புகள் தான்....
Read More

Monday, 2 December 2013

படித்ததில் பிடித்தது

இன்று  வலைப்பூவில் படித்ததில் பிடித்தது. அ முதல் ஔ வரை! அ - அம்மா...! ஆ - ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை இ - இன்னும் கரண்டு வரலை, ஈ - ஈ.பி'ய மூடிட்டு போய்டுங்க, உ - உங்கள நம்பி அரிசியை, ஊ - ஊற போட்டு வச்சுருக்கோம், எ - என்னைக்கு ஆட்டி, இட்லி தின்னு, ஏ - ஏப்பம் விட போறோமோ? ஐ - ஐயோ..முடியல.. ஒ - ஒரு இன்வெர்டராவது, ஓ - ஓசியில் தாங்க... ஔ – அவ்வ்வ்வ்! - தமிழன் என்ற இந்திய...
Read More

Thursday, 26 September 2013

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறும். இடம்: டேக் (TAG) அரங்கம் (இயந்திரப் பொறியியல் துறை அருகில்) கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம். வழி: மின்தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கிண்டி / சைதாப்பேட்டையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மாறி வர வேண்டும். பறக்கும் தொடர் வண்டி மூலம் வருபவர்கள் கஸ்தூரிபாய் நகர் நிறுத்தத்தில்...
Read More

Friday, 20 September 2013

நாய் பாசம்

தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். இரவு மணி சுமார் 11 ஐ நெருங்கிக் கொண்டிருக்கும். ஆள் அரவமில்லாத அந்த தெருவில் இரவு நேரத்து வாசிகளான நாய்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. 4 முதல் 5 தெரு நாய்கள் ஒன்றாக நின்றுகொண்டிருந்தன ஒரு வீட்டின் முன்னால். அதே வீட்டினுள்ளிருந்து எஜமானருடன் மேல் ஜாதி வகை நாய் நடை பயிற்சிக்காக (வாக்கிங்) வந்து கொண்டிருந்தது. எஜமானர் மற்ற தெரு நாய்களின் அட்டகாசத்தை பார்த்துவிட்டு தனது மேல் ஜாதி நாயிடம், "ஜிம்மி போகாதே, அங்கே நாய்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. பார்த்தால் உன்னை...
Read More

Friday, 13 September 2013

தலை காவிரி முதல் கடை காவிரி வரை

குடகு மலையில் உருவாகும் காவிரி பிரம்மாண்டமாக பல மைல் கடந்து, பல நிலங்கள் கடந்து, சில அணைகளுள் அகப்பட்டு, பல ஆற்றோரங்களை கடந்து, பல மனிதர்களை கடந்து, கடை மடைப் பகுதிகளை செம்மையாக்கி கடைசியில் ஆடு தாண்டும் காவிரியாக மாறி கடலில் இணைகிறது. இந்த காவிரியின் பயணத்தை, 'நடந்தாய் வாழி காவேரி' எனும் நூலில் தி. ஜானகிராமன் மிகவும் அருமையாக, அனுபவப் பூர்வமாக பயணித்து எழுதியிருப்பார். பயணித்த காலம் சுமார் 40 வருடங்களுக்கு முன்னதாக இருக்கும்.  சமீபத்தில், அதீதம் தளத்தில் 'விண்ணோடு விரியும் விழிகள் - காவிரியின் கதை' என்ற பெயரில்...
Read More

Thursday, 5 September 2013

மேன்ஷன் வாழ்க்கை கவிதைகள்

மேன்ஷன் வாழ்க்கையைப் பற்றி வந்த தமிழின் முதல் கவிதைத் தொகுப்பு என அறியப்படுகிறது, பவுத்த அய்யனாரின் "மேன்ஷன் கவிதைகள்" 1. இந்த அறையை நோக்கி பூமியின் எப்பகுதியிலிருந்தும் ஒரு கடிதம்கூட எட்டிப்பார்த்ததில்லை இந்த அறைக்கு நண்பர் என்றுசொன்ன எந்த மனிதரின் காலடியும் பட்டதில்லை பறவையின் குரல் நாயின் குரல் வானின் குரல் எதுவும் தொட்டதில்லை சூரியனின் கதிருக்குக் காத்திருந்து காத்திருந்து மனமொடிந்ததுதான் மிச்சம் காற்று மட்டும் அறீயாமல் வந்து உயிரைக் காப்பாற்றுகிறது அறையும் நானும் காத்திருக்கிறோம் அறிமுகமான மனித முகம் வேண்டி 2....
Read More

Wednesday, 4 September 2013

விளம்பர உலகம்

ஒரு பொருள், சேவை, தகவல் மக்களை சென்றடைய விளம்பரங்கள் இன்றியமையாத வழி. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தகவல்கள் பரிமாற்றம் சுவர் ஓவியங்களினாலும், போஸ்டர் பிறகு பத்திரிக்கை, செய்தித் தாள், வானொலி, தொலைக் காட்சி வாயிலாகவும் அதன் பிறகு மின் அஞ்சல் மற்றும் இன்டர்நெட் வாயிலாகவும் தெரிவிக்கப்படுகின்றன. கீழ்காணும் படத்தில் ஒரு வித்தியாசமான வேலை வாய்ப்பு விளம்பரம்.  இந்த விளம்பரம் சென்னை, கன்னிமாரா...
Read More

Thursday, 15 August 2013

67 வது விடுதலை திருநாள்

67 வது விடுதலை திருநாள் நல்வாழ்த்துக்கள்.. வந்தே மாதரம். ஜெய்ஹிந்த்  ...
Read More

Tuesday, 6 August 2013

மேட்டூர் அணை - காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம்

கடந்த இரண்டு வருடமாக காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தண்ணீரே பார்த்திராத மக்களுக்கு இந்த வருடம் தமிழகத்தில் பருவ மழை மீதமுள்ள நிலையிலும், கர்நாடகத்தில் பெய்த மழையினால் நிரம்பியது மேட்டூர் அணை. அது மட்டுமல்லாது எண்ணற்ற விவசாயிகளின் மனதும் நிறைந்தது. இந்த நல்ல வேளையில், மேட்டூர் அணை பற்றி.... ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ். மேட்டூர் அணையை வடிவமைத்தவர். அணையின் பிரதான பகுதியில் ஆள் உயர சிலையாக நின்று தான் வடிவமைத்த அணையை பார்த்தபடி நின்று கொண்டு இருக்கிறார். இன்றைக்கு 48...
Read More

Saturday, 27 July 2013

50 ஆவது பதிவு

50 ஆவது பதிவு: வலை பதிவு உலகிற்கு வந்து சுமார் 8 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், முதலில் ஆரம்பித்த வலைப்பூவில் எழுத முடியவில்லை. பூர்வ காவேரி எனும் இந்த வலைப்பூவில் 49 இடுகைகளை முடித்து 50 ஆவது இடுகையை பதிவு செய்ய ஊக்கமளித்த கடவுளுக்கும், குடும்பத்தினர்க்கும் நன்றிகள் பல. மேலும், இந்த வலைப்பூவின் பெயர் சூட்டவும், எழுதுவதற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்த கவிஞர் ராணி திலக் அவர்களுக்கு நன்றி. ...
Read More

ஷாலோம் மேன்ஷன்

ஷாலோம் மேன்ஷன்: 2004 ஆண்டு டிசம்பர் மாதம், Engineering Project செய்வதற்காக கும்பகோணத்திலிருந்து இரவு புறப்பட்டு காலையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி நண்பன் ராகவேந்திரா விற்கு தொடர்பு கொண்து ஷாலோம் மேன்ஷன் எங்கே உள்ளது என்று தொலை பேசியபோது, ரயில் நிலையத்திலிருந்து மாம்பலம் தபால் நிலையம் அருகே வந்து தொலை பேச சொன்னார். மாம்பலம் போஸ்டல் காலனி வரை தேடி விட்டு ஷாலோம் மேன்ஷன் கண்டுபிடிக்க முடியாததால், மறுபடியும் நண்பனுக்கு தொலைபேசியபோது தவறான பாதையில் சென்றுவிட்டதாக கூறவே, அங்கிருந்து விசாரித்து...
Read More

Tuesday, 23 July 2013

Mobile Phone Etiquettes

Following is a list of do's and don'ts: - Do respect those who are with you. When you're engaged face-to-face with others, either in a meeting or a conversation, give them your complete and undivided attention. Avoid texting or taking calls. If a call is important, apologize and ask permission before accepting it. - Don't yell. The average person talks three times louder on a cellphone than they do in a face-to-face conversation. Always be mindful of your volume. - Do be a good dining companion. No one wants to be...
Read More

Wednesday, 10 July 2013

குடமுருட்டி - இலங்கை கிளிநொச்சியிலும் ...

குடமுருட்டி - காவேரி நதியின் முக்கிய கிளை நதி, "பூர்வ காவேரி" என்பது இந்நதியின் பழைய பெயர். குடமுருட்டி ஆறு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் இருந்து காவிரியின் கிளை நதியாகிறது. சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, குடமுருட்டி எனும் நதி இலங்கை, கிளிநொச்சி பகுதியிலும் இருப்பதாகக் கண்டேன். ஒரு நாட்டில் உள்ள நதியின் பெயர், மற்றொரு நாட்டில் அறியப்படுவது சாதாரணம். (உதாரணம்: சிந்து நதி பாகிஸ்தானிலும் உள்ளது). என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை நிலப்...
Read More

Saturday, 6 July 2013

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் யோகா வகுப்புக்காக (ஆம்! மிக தாமதமான முடிவுதான்), சென்னை மாம்பலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு  சென்று வருகிறேன். வகுப்பு காலை 05:30 மணி முதல் 07:00 மணி வரை பள்ளியின் மூன்றாம் மாடியில். பள்ளியில் உள்ள UKG வகுப்பு கரும் பலகை கண்ணில் பட்டது. என்ன தான் பாடம் சொல்லித் தந்திருக்கின்றனர் என்று கவனித்தேன். கரும் பலகையின் மேல் புறத்தில் வலது ஓரம் நாள் மற்றும் கிழமை, இடது புறம் பதிவு மற்றும் வருகை. (வழக்கம் போல) நடுவில் வழக்கமாக ஏதாவது பொன்மொழிகள் எழுதுவது உண்டு.  UKG வகுப்பில் இவ்வாறு எழுதியிருந்தது. "நீ...
Read More

Saturday, 29 June 2013

History of Spectacles

நல்லா கண்ணைத் துடைச்சுக்கிட்டு பாருங்க... நான்தாங்க உங்க 'மூக்குக் கண்ணாடி’ பேசுறேன். விதவிதமான கண்ணாடிகளைப் போட்டு அசத்துறீங்க. சிலர் அடிக்கடி உடைச்சுடுறீங்க. மறந்து எங்கேயாவது வெச்சுடுறீங்க. நான் எப்படி எல்லாம் உருவாகி வருகிறேன் என்று தெரிந்தால், அப்படிப் பண்ண மாட்டீங்க தானே, வாங்க சொல்றேன்... கண்ணாடி மற்றும் ஃபிரேம் ஆகியவை பொதுவாக எனது பாகங்கள் என்றாலும், அந்த இரண்டு பிரதான பாகங்களுக்குள் சில பாகங்கள் உண்டு. ஆரம்பக் காலத்தில் கண்ணாடி (குவி மற்றும் குழி) லென்ஸைக் கொண்டு என்னைச் செய்தார்கள். இப்போதும் பிரத்யேகமாய் ஆர்டர்...
Read More

Saturday, 18 May 2013

மேகமலை - பயணம்

அகரம் நண்பர்கள் மேகமலை பயணத்திற்காக முடிவு செய்த போது 3 நாட்களும் வந்திருந்து விழாவை (ஹி.. ஹி..) பயணத்தை சிறப்பிக்கலாம் என்று நினைத்தேன். வழக்கம் போல அலுவலக பணிச்சுமை காரணமாக 2 நாட்கள் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது. வெள்ளிக் கிழமை இரவு KPN Travels பேருந்து மூலமாக  சின்னமனூர் சென்று, அங்கிருந்து மேகமலை செல்வதாக திட்டம். (நண்பர்கள் அனைவரும் வெள்ளி காலையே மேகமலை சென்றிருந்தனர்). மேகமலையில் BSNL Tower மட்டுமே உண்டு என்பதால் தகவல் தொடர்பு மிகவும் கடினம். மேகமலை சென்ற நண்பர்கள், அங்கு நான் எங்கு வந்து...
Read More

Friday, 29 March 2013

கை பேசி

கிட்டத்தட்ட கை இருக்கும் அனைவரும் பயன்படுத்தும் சாதனமாக மாறிவிட்டது கை பேசி. (சிலர் ஒன்றுக்கும் மேலாக). உணவு, உடை, இருப்பிடம், கை பேசி என அடிப்படைத் தேவைகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்தியிருக்கிறது கை பேசி. விஷயத்துக்கு வருவோம்..... கை பேசியின் பயன்கள் எண்ணிலங்கா. பயன்படுத்தும் வயது வரம்பு தற்போது > 3 ஆக இருக்கிறது. தொடர்பு கொள்ளுதல் அல்லது உரையாடல் என்ற அடிப்படை தேவைகளுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு பல விஷயங்களுக்காக பயன்படுத்தப் பட்டு வருகின்றது. வயதுக்கேற்ப அதன் தேவைகள் பிரித்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. மற்றவர்களை...
Read More

Wednesday, 13 March 2013

மஹா சிவராத்திரி - ஸ்ரீ காளஹஸ்தி தரிசனம்

10.03.2013 - மஹா சிவராத்திரி யை முன்னிட்டு ஸ்ரீ காளஹஸ்தி பெருமானை தரிசிக்க முந்தைய நாள் மாலையே சென்னையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீ காளஹஸ்தி வந்தடைந்தோம்.  சிவராத்திரிக்கு முந்தைய நாள் என்பதால் தேவஸ்தான தங்கும் அறைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தனியார் விடுதிகளுக்கோ கொழுத்த கொண்டாட்டம். அறை வாடகையெல்லாம் இரு மடங்கு உயர்த்தியிருந்தனர். நமக்கு வேறு வழி இல்லாது இரு மடங்கு வாடகையில் ஒரு அறையை பிடித்தோம். மாட வீதிகளில் விநாயகர், முருகர், ஞானபிரசுனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் வீதி உலா கண் கொள்ளா காட்சியாக அமைந்தது. சிவராத்திரி...
Read More

Tuesday, 12 March 2013

பாரதி !!!

"யோக சக்தி" என்னும் தொகுப்பில், மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் கவிதை, பல நேரத்தில் வாழ்க்கையில் தூண்டுகோலாக அமைந்தது. தேடிச் சோறுநிதந் தின்று - பல  சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்  வாடித் துன்பமிக உழன்று - பிறர்  வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல  வேடிக்கை மனிதரைப் போலே - நான்  வீழ்வேனென்று நினைத்தாயோ? நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்  முன்னைத் தீயவினைப் பயன்கள்...
Read More

Tuesday, 26 February 2013

Think out of the box - 2

Question 1: You are driving along in your car on a wild, stormy night, it's raining heavily, when suddenly you pass by a bus stop, and you see three people waiting for a bus: An old lady who looks as if she is about to die. An old friend who once saved your life. The perfect partner you have been dreaming about. Which one would you choose to offer a ride to, knowing very well that there could only be one passenger in your car?  You could pick up the old lady, because she is going to die, and thus you should...
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena