Sunday 5 June 2016

சரவணகுமார் - திருமண வரவேற்பு - தாவளம் - பயணம் - 2

கோவை - தடாகம் - ஆனைகட்டி என கேரளா எல்லையை தாண்டி, அங்கிருந்து அகலி வழியாக அட்டபட்டி செல்லும் சாலை இது. கேரள வனத்துறையினரால் பாதுகாக்கப் படும் Reserved Forest -ல் மலை பாதையில் பயணமானோம். Gods Own Country என சும்மாவா அழைக்கின்றார்கள்!! வழியெங்கும் மரங்கள் பசுமை மட்டுமே. மலைப்பாதை அத்தனை சுலபமாக இல்லை குறுகிய திருப்பங்கள், கொண்டை ஊசி வளைவுகள் என கடினம் தான். 

தாவளம் வந்தாயிற்று. Resort - க்கு செல்ல வழி சொல்ல பணியாளர் வந்திருந்தார். அவரின் வழிகாட்டுதலின்படி மேலும் கரடு முரடான மலை சரிவான சாலையில் பயணித்து Resort வந்தடைந்தோம். 

ஓரளவுக்கு வெயிலின் தாக்கம் தணிந்து மலை - மரம் - காற்று - சில்லென்ற சீதோஷண நிலைபாட்டுக்கு மாறியிருந்தோம். மேலும், அவரவர்கள் மூட்டை முடிச்சுகளை எல்லாம் எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைகளில் வைத்துவிட்டு Resort - ன் பின்புறத்தில் பவானி ஆறு ஓடுகிறது என்று எங்களை அழைத்து சென்றனர். சூடான பஜ்ஜியுடன் Welcome Drink - கான டீ கொடுத்தனர். பவானி ஆறு மற்றும் Resort ஐ கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்தவுடன் சற்று இளைப்பாறினோம்.

அதன் பின்னர், நண்பர்கள் சில நேரம் கூடி அமர்ந்து குழு விளையாட்டுகள் விளையாடினோம். பாட்டுக்கள், நடனம், மிமிக்ரி, கேரம் போர்டு விளையாட்டு என சில நேரம் கடந்தது.

சில்லென்ற சீதோஷண பகுதிகளில் இரவில் எப்போதும் Bon-Fire என்றும் Camp-Fire என்றும் அழைக்கப்படும் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டோம். மேலும், அதே Bon-Fire - ல் பார்பெக்யூ எனப்படும் திறந்த வெளிப் பெரும் விருந்து எங்களுக்காக அரம்பமானது.  சைவ - அசைவ உணவுகள் அவரவர்கள் விருப்பதிற்கேற்றவாறு பரிமாறப்பட்டது.

இரவு உணவை செரிக்க செய்ய சிறிது நேரம் காலாற நடந்துவிட்டு வந்து மீண்டும் கேரம் போர்டில் சில ஆட்டங்களை முடித்துவிட்டு களைப்பாக இருக்கவே உறங்க சென்றோம். நண்பர்கள் அவரவர் விருப்பதிற்கேற்றவாறு பேசியும், கேரம் போர்டு விளையாடியும் பொழுது போக்கினர்.

நேரம் செல்ல செல்ல குளிர ஆரம்பிக்கவே போர்வையை இழுத்துப் போர்த்தியவாறே தூங்கிக்கொண்டிருந்தோம். இடையில் நண்பர்கள், சில காட்டு விலங்குகளை பார்த்தோம் என்றும் அவை இங்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பேசிக்கொண்டிருந்தனர். (தூக்கத்தில் கேட்டது..). சுமார் நான்கு மணியளவில் காட்டு நாய்கள் நடமாட்டம் இருக்கிறதென்றும் அவை இங்கு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் நண்பர் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டிருந்தார். என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று வந்த பயணக் களைப்பில் தூங்கிக்கொண்டிருந்தோம்.

Read More

Saturday 28 May 2016

சரவணகுமார் - திருமண வரவேற்பு - தாவளம் - பயணம் - 1

நண்பர் சரவணகுமாரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு மாதத்துக்கும் மேலாக பயணம் திட்டமிடப்பட்டது. வரவேற்பு ஞாயிற்றுக் கிழமையாக இருக்கவே, இன்னும் ஒரு நாள் சேர்த்து ஊர் சுற்றலாம் என முடிவு செய்து ஊட்டி, கேரளா என ஏகப்பட்ட இடங்களை தெரிவு செய்து கடைசியாக கேரளா - தாவளம் - அட்டபட்டி - ல் இருக்கும் ஒரு Eco - Organic - River View Resort என்று முடிவெடுக்கப் பட்டது.

சரவணகுமாரின் திருமண வரவேற்பு என்பதால் (!!!) தற்போதைய மற்றும் முன்னாள் அலுவலக நண்பர்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைத்து திங்கட்கிழமை விடுப்பு எடுப்பதாக முடிவு செய்யப்பட்டு பயண திட்டம் வகுக்கப்பட்டது.

நாள் 0 (மாலை): சென்னை - கோவை பயணம்
நாள் 1: சரவணகுமார் வரவேற்பு - தாவளம் பயணம் - தங்கல்
நாள் 2: தாவளம் ஊர் சுற்றல் - சென்னை பயணம்

பயணத்திற்கான பேருந்து பர்வீன் நிறுவத்திலும், தங்குமிடத்திற்கான முன்னேற்பாடுகளையும், பயண நாளுக்கான இரவு உணவும் ஏற்பாடு  செய்தாகிவிட்டது.

நாள் 0 மாலை 6 மணிக்கெல்லாம், அலுவலகம் முன்னாள் நண்பர்களின் வருகை களை  கட்டியது. இரவு சுமார் 7:45 மணிக்கு பயணத்தை தொடங்கினோம். வழியில் Chromepet, Guduvancherry என நண்பர்களை பேருந்தில் ஏற்றியாயிற்று. இரவு உணவை நெடுஞ்சாலை மொடேல் அருகில் நிறுத்தி முடித்தாயிற்று. இடையில் சேலம் புறவழி சாலையில் தேநீர் மற்றும் இயற்கை கடன்கள் நிறைவேற்றம்.

காலை மணி 7 க்கு கோவை - சூலூர் வந்தடைந்தோம். சூலூரில் நண்பர் ஹோட்டல் அறைகளை எங்களுக்காக ஒதுக்கியிருந்தார். சிறிது நேர ஆசுவாசத்திற்குப் பிறகு நாங்கள் எங்களை தயார் செய்து கொண்டு காலை உணவுக்கு தயாரானோம். திருமண வரவேற்புக்கு செல்கிறோம் என்பதால் அனைவரும் வேஷ்டி - சட்டை அணிந்திருந்தோம்.

திருமண வரவேற்பு கோவை - ஈச்சனாரி ஹேமாம்பிகை மண்டபத்தில் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் முதலில் ஒரு குழுவாக மண  மக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். மேலும் ஒரு கேக் ஆர்டர் செய்து அதை மேடையிலேயே மணமக்களை வெட்ட வைத்தோம்.

மதிய உணவை முடித்துக் கொண்டு சுமார் 2 மணிக்கெல்லாம் அடுத்த இலக்கான தாவளம் நோக்கி புறப்பட தயாரானோம். பேருந்தில் ஏறும் போதே பின் டயர் பஞ்சர் என்றும் அதனை சரி செய்த பிறகே தாவளம் நோக்கி பயணப் படலாம் என்றனர், கோவை வடவள்ளி அருகே பேருந்து பின் (பின்) சக்கரத்தை கழற்றி, மாட்டி சரி செய்தாயிற்று. நண்பர்கள் அனைவரும் இந்த டயர் கழற்றி-மாட்டும் வேலைகளில் பேருந்து ஓட்டுனர் மற்றும் உதவியாளருக்கு உதவி செய்தனர். 4 மணியளவில் தாவளம் நோக்கி பயணமானோம்.





Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena