Friday 29 March 2013

கை பேசி


கிட்டத்தட்ட கை இருக்கும் அனைவரும் பயன்படுத்தும் சாதனமாக மாறிவிட்டது கை பேசி. (சிலர் ஒன்றுக்கும் மேலாக). உணவு, உடை, இருப்பிடம், கை பேசி என அடிப்படைத் தேவைகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்தியிருக்கிறது கை பேசி. விஷயத்துக்கு வருவோம்.....

கை பேசியின் பயன்கள் எண்ணிலங்கா. பயன்படுத்தும் வயது வரம்பு தற்போது > 3 ஆக இருக்கிறது. தொடர்பு கொள்ளுதல் அல்லது உரையாடல் என்ற அடிப்படை தேவைகளுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு பல விஷயங்களுக்காக பயன்படுத்தப் பட்டு வருகின்றது. வயதுக்கேற்ப அதன் தேவைகள் பிரித்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

  • மற்றவர்களை தொடர்பு கொள்ளுதல்,
  • குறுஞ்செய்திகள்
  • சிறு வயதினர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் விளையாடும் விளையாட்டுக்கள்.
  • இணையப் பயன்பாடு
  • புகைப்படங்கள் எடுத்தல் .....

இன்னும் எத்தனையோ... 
Read More

Wednesday 13 March 2013

மஹா சிவராத்திரி - ஸ்ரீ காளஹஸ்தி தரிசனம்


10.03.2013 - மஹா சிவராத்திரி யை முன்னிட்டு ஸ்ரீ காளஹஸ்தி பெருமானை தரிசிக்க முந்தைய நாள் மாலையே சென்னையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீ காளஹஸ்தி வந்தடைந்தோம். 

சிவராத்திரிக்கு முந்தைய நாள் என்பதால் தேவஸ்தான தங்கும் அறைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தனியார் விடுதிகளுக்கோ கொழுத்த கொண்டாட்டம். அறை வாடகையெல்லாம் இரு மடங்கு உயர்த்தியிருந்தனர். நமக்கு வேறு வழி இல்லாது இரு மடங்கு வாடகையில் ஒரு அறையை பிடித்தோம். மாட வீதிகளில் விநாயகர், முருகர், ஞானபிரசுனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் வீதி உலா கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.

சிவராத்திரி அன்று (11.03.13) காலை 6 மணிக்கு கோவிலுக்குள் வந்து மதியம் 12 மணியளவில் மூலவரை தரிசனம் செய்துவிட்டு, அம்பிகையையும் தரிசனம் செய்தோம். சிவராத்திரியென்பதால் எந்த தோஷ, நிவாரண பூஜையும் இல்லை என்று கூறியிருந்தனர். 6 மணி நேரம் வரிசை ஒரு பாம்பு போல வளைந்து நெளிந்து சென்று சன்னதியை அடைந்தது. (கிட்டத் தட்ட ஒரு 4 கி. மீ இருக்கும் கோவிலுக்குள்ளேயே சுற்றியது). வயதானவர்களும், கைக்குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்களும் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகினர். 

சிவராத்திரியை முன்னிட்டு மாட வீதிகள், பொன்முகலிகை ஆறு, கண்ணப்பர் மலை ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. அவை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

சிவபெருமான் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.  
Read More

Tuesday 12 March 2013

பாரதி !!!

"யோக சக்தி" என்னும் தொகுப்பில், மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் கவிதை, பல நேரத்தில் வாழ்க்கையில் தூண்டுகோலாக அமைந்தது.


தேடிச் சோறுநிதந் தின்று - பல 
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் 
வாடித் துன்பமிக உழன்று - பிறர் 
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல 
வேடிக்கை மனிதரைப் போலே - நான் 
வீழ்வேனென்று நினைத்தாயோ?

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் 
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி 
என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் 
கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங்கொண்டிருக்கச் செய்வாய்!

Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena