Tuesday 26 February 2013

Think out of the box - 2


Question 1:
You are driving along in your car on a wild, stormy night, it's raining heavily, when suddenly you pass by a bus stop, and you see three people waiting for a bus:
  • An old lady who looks as if she is about to die.
  • An old friend who once saved your life.
  • The perfect partner you have been dreaming about.

Which one would you choose to offer a ride to, knowing very well that there could only be one passenger in your car? 
  • You could pick up the old lady, because she is going to die, and thus you should save her first;
  • You could take the old friend because he once saved your life; this would be the perfect chance to! Pay him back.
  • However, you may never be able to find your perfect mate again.

Answer:

"I would give the car keys to my Old friend and let him take the lady to the hospital. I would stay behind and wait for the bus with the partner of my dreams."

Question 2:
What will you do if I run away with your sister?"

Answer: "I will not get a better match for my sister than you sir"

Question 3:
Interviewer (to a student girl candidate) - What is one morning you woke up & found that you were pregnant.

Answer: Girl - I will be very excited and take an off, to celebrate with my husband.

Question 4:
Interviewer: He ordered a cup of coffee for the candidate. Coffee arrived kept before the candidate, then he asked what is before you?
Candidate: Instantly replied "Tea"
He got selected. You know how and why did he say "TEA" when he knows very well that coffee was kept before.

Answer:  
The question was "What is before you (U - alphabet) Reply was "TEA" ( T - alphabet) Alphabet "T" was before Alphabet "U"

Question 5:
Where Lord Rama would have celebrated his "First Diwali"? People will start thinking of Ayodya, Mitila [Janaki's place], Lanka etc...

Answer:
But the logic is, Diwali was a celebrated as a mark of Lord Krishna Killing Narakasura. In Dusavataar, Krishnavathaar comes after Raamavathaar. So, Lord Rama would not have celebrated the Diwali At all!

Question 6:
The interviewer asked to the candidate "This is your last question of the interview. Please tell me the exact position of the center of this table where u have kept your files."

Candidate confidently put one of his fingers at some point at the table and told that this was the central point at the table.
Interviewer asked how did u get to know that this being the central point of this table, then he answers quickly that "Sir you are not likely to ask any more question, as it was the last question that u promised to ask....."
Read More

Think out of the box - 1



Q.  How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
A:  Concrete floors are very hard to crack!

Q.  If it took eight men ten hours to build a wall, how long would it take four men to build it?
A:  No time at all it is already built.

Q.  If you had three apples and four oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
A:  Very large hands. (Good one)

Q.  How can you lift an elephant with one hand?
A:  It is not a problem, since you will never find an elephant with one hand.

Q.  How can a men, go eight days without sleep?
A:  No Problem, he sleeps at night.

Q.  If you throw a red stone into the blue sea what it will become?
A:  It will Wet or Sink as simple as that.

Q.  What looks like half apple?
A:  The other half.

Q.  What can you never eat for breakfast?
A:  Dinner.

Q.  What happened when wheel was invented?
A:  It caused a revolution.

Q.  Bay of Bengal is in which state?
A:  Liquid


Read More

Friday 22 February 2013

பண்பும் பழக்கமும்

அகரம் வழிகாட்டிகள் - குட்டீஸ் உலகம் (பிப்-2013) காக எழுதியது....


நல்ல பண்புடையவர்களை  நாம் நண்பர்களாக  ஏற்றுக் கொள்ள  வேண்டும், அவர்களின் குணங்களை  நாமும் கடைபிடிக்க வேண்டும். அவர்களால் தான் இவ்வுலகம் செயல்படுகிறது. இதனை,

பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மண்

என்று வள்ளுவர் கூறுகிறார். நாம் செய்கின்ற நல்ல செயல்களே நமது பண்பாகும். மேலும் நல்ல செயல்கள் நல்ல சிந்தனையின் மூலம் வெளிப்படும்.

தோட்டத்தில் எத்தனை எத்தனை மரங்கள்... அதில் எத்தனை எத்தனை மலர்கள், இலைகள், பழங்கள்... இவைகளெல்லாம்.. நான் இனிப்பாய் இருக்கிறேன்., நீ கசப்பாய் இருக்கிறாய்., என் இலைகள் பச்சை, உன் இலைகள் பழுப்பு என்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதில்லை. ஏன் விலங்குகள் கூட உணவைத் தவிர்த்து பிறவற்றிற்கு சண்டையிடுவதில்லை. ஆனால் மனிதர்கள்......?

சரி! நல்ல பண்புகளை எப்படித்தான் வளர்த்துக் கொள்வது? நல்ல நல்ல புத்தகங்களைப் படிக்கலாம், பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்கலாம். அவையே நாளடைவில் நமக்கு பழக்கமாகிவிடும். பழக்கம் எப்படி வரும்? சிறு உதாரணம் மூலம் பார்ப்போமா!

பூந்தொட்டியில் விதையிட்டு நீர் ஊற்றுங்கள், சிறிதாய் செடி முளைத்து வரும். செடியை வளைத்து நூலினால் கட்டுங்கள். சில நாட்களுக்குப் பிறகு நூலினை வெட்டி விடுங்கள். ஆனாலும், செடி செங்குத்தாய் வளராமல் வளைந்தே வளரும். ஏனென்றால், செடி அவ்வாறு   பழக்கப்பட்டிருகிறது. அதனைப் போலவே நாமும் நல்ல பண்புகளை தொடர்ந்து செய்தால் அதுவே நமக்கு பழக்கமாகும்.

இதனைத்தான் ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளருமா? என்று கூறுவர். எனவே, நாம் நல்ல பண்புகளை சிறு வயதிலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும். கோபம், பொறாமை, பொய் சொல்லுதல் போன்ற தீய குணங்களை விட்டுவிட வேண்டும். நல்ல பண்புகளை பழக்கப்படுத்திக் கொண்டு பண்புடன் வாழ வேண்டும்.

Read More

Friday 15 February 2013

விஸ்வரூப விமர்(தரி)சனம்


இதெல்லாம் முதல் காட்சியையோ அல்லது Preview Show வை பார்த்தவர்கள் எழுதவேண்டியது என்கிறீர்களா.. (சும்மா ஒரு விளம்பரம்... - வரலாற்றில் நாமும் இடம் பிடிக்கணும் இல்லையா....)

நண்பர் வீரமணி (ஜீ தமிழ்) நண்பர்களுக்காக முன் பதிவு செய்திருக்க, ஒரு புண்ணியவான் வழக்கம் போல கடைசி நேரத்தில் வராததனால், இடையில் சேர்ந்து கொண்டேன். சனிக்கிழமை காலை 09:50 க்கு காட்சி புரசைவாக்கம் அபிராமி மெகா மால் - 7 ஸ்டார் ல். 09:00 மணிக்கு மாம்பலத்தில் இருந்து Fast Local Train ல், எழும்பூர் வந்து அங்கிருந்து 20 ஆம் எண்  பேருந்தில் அபிராமி மெகா மால் வந்த போது மணி 09:40. (எனக்கே ஆச்சர்யம் அவ்வளவு விரைவாக வந்ததற்கு.)

சரியாக 9:50 க்கு காட்சி ஆரம்பமானது. நம்மூர் டென்ட் கொட்டாய் போல Title, கமல் ஹாசன் பெயர் ஆரம்பித்து அத்தனைக்கும் ஒரே விசில் தான். 

முதல் காட்சியிலேயே கதையை ஆரம்பித்துவிடுகிறார்கள். விமானம் டேக் ஆப் ஆவதைப் போல, மெல்ல வலது, இடது திரும்பி, நேராகி, லேசாய் நகர ஆரம்பித்து பின்பு தடதடவென ஒர் ஓட்டத்துடன், விர்ரென மேலெறும் போது ஒர் பதட்டப் பந்து நமக்குள் உருவாகுமே அந்த அனுபவத்தை திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். பயணத்தின் போது இடையிடையே ஏறபடும் சலிப்புகளும், ஃப்ரெஷ்ஷான ஹோஸ்டஸை பார்த்ததும் கிளறி நிற்கும் சுறுசுறுப்புமாய் படம் க்ளைமாக்ஸ் வரை பயணிக்கிறது. 

கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் விதம், அவர்களின் பின்னணி, அக்கேரக்டர்களுக்கிடையே இருக்கும் உறவுகளின் நிலை என்ன என்பதை எத்தனை நாசுக்காக, சிறுசிறு வசனங்கள், காட்சிகளின் மூலமாய்  வெளிப்படுத்தும் விதம், உலகத்தரம். சமகால தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவிலேயே பார்த்திருக்க முடியாது.  அதன் பின் வரும் தலிபான் தீவிரவாத குழுக்களின் பின்னணிக் கதை, ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்க்கையில் பின்னி பினைந்திருக்கும் தீவிரவாதம் பற்றிய காட்சிகள்,  இதுவரை இந்திய திரையில் சொல்லப்படாதது. 

நாட்டிய கலைஞனாய் வரும் நேரங்களில் கமலின் குரல் மற்றும் உடல் மொழியில் தெரியும் நளினம், ”உனைக் காணாத” பாடலில் அவர் காட்டும் முகபாவங்கள் வாவ்.. க்ளாஸ். முக்கியமாய் நியூயார்க் வீதிகளில் முழுக்க முழுக்க பெண்மைத்தனமில்லாமல் நளினம் கலந்த ஒர் நடை நடந்து போவார்.. வாவ்.. வாவ்.. கலைஞன். அதே போல ஒர் இக்கட்டான சூழ்நிலையில் தான் இந்து அல்ல ஒர் முஸ்லிம் என்று பிரகடன்ப்படுத்தி, தன் நிஜ நிலையை உணர்த்தும் காட்சி வாவ்..வாவ்..வாவ்... மக்களே தயவு செய்து அந்தக் காட்சியை உற்று கவனியுங்கள்  நடிப்பிலாகட்டும், டெக்னிக்கல் ப்ரில்லியன்சிலாகட்டும் விஷூவல் ட்ரீட். ஒரு காட்சியில் டைமிங்கில்  கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வார் எதிரிகளை துவம்சம் செய்து விட்டு, அந்த நேரத்தில்  என்னையும் அறியாமல் கை தட்டிக் கொண்டேயிருந்தேன். மொத்த தியேட்டரும் உற்சாக குரலெழுப்பியது.

கடைசியில், விஸ்வரூபம் - II இந்தியா என்று வேறு போட்டு மிரட்டுகிறார்(கள்). பார்ப்போம்.....  
Read More

Sunday 10 February 2013

பணம் :-) .... :-(



எனது செல்பேசியினுடைய மின் கலன் புதுப்பிக்கும் கருவி (Cell Phone - Charger) பழுதடைந்ததால் புதிய கருவி வாங்க பூர்விகா மொபைல் வேர்ல்ட் (ரங்கநாதன் தெரு) ல் விசாரித்த பொது ரூ. 350 மற்றும் வாரண்டி 6 மாதங்கள் என்றார்கள் முதல் நாளில். இதே பூர்விகா மொபைல் வேர்ல்ட் (புரசை) ல் ரூ. 350 மற்றும் 3 மாதங்கள் மட்டுமே வாரண்டி என்றார்கள்-இது மறு நாள். அன்றே மறுபடியும் ரங்கநாதன் தெரு பூர்விகாவில் ரூ. 300 மற்றும் 6 மாத வாரன்ட்டியில் அந்த கருவியை வாங்கியிருக்கிறேன். ஏன் ஒரே கடையின் பெயரில் வாடிக்கையாளர்களை இப்படி ஏமாற்றுகிறார்கள் என்று புரியவில்லை. ஒரே நாளில் 50 ரூபாய் குறைந்து விட்டதா என்ன? வாடிக்கையாளரே தெய்வம் என்ற மகாத்மாவின் கருத்தெல்லாம் மலையேறிவிட்டது. (பணம் படும் பாடு....)

தி. நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டே ஸ்டாப் ல் வந்து விடும் காமராஜர் இல்லம் நிறுத்தம், அதற்கு வெள்ளை நிற போர்டு உள்ள பேருந்தில் கட்டணம் ரூ. 4. இன்று பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை வரை செல்ல நேர்ந்தது. மொத்தம் 6-8 பேருந்து நிறுத்தங்கள். அதற்கும் ரூ. 4 பேருந்துக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. என்ன கணக்கில் கட்டணங்களை நிர்ணயம் செய்கிறார்களோ. அரசுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் மட்டுமே தெரியும் உண்மை. (பணம் படும் பாடு....)
Read More

Friday 1 February 2013

சப்த மங்கை தலங்கள் - அறிமுகம்


கவிஞர் ராணி திலக் அவர்களுடன், சப்த மங்கை தலங்கள் சிலவற்றிற்கு சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. சப்த மங்கை தலங்கள்,

1. சக்கராப்பள்ளி
2, அரியமங்கை
3. சூலமங்கை
4. பசுபதிமங்கை
5. நல்லிமங்கை
6. தாழமங்கை
7. புள்ளமங்கை 

இந்த சப்த மங்கை தலங்கள் அனைத்தும் அய்யம்பேட்டைக்கு மிக அருகில் இருப்பவை. இங்கு நடைபெறும் சப்தஸ்தான பல்லக்கு விழா மிகவும் பிரசித்தி பெற்றது. (மற்றொரு பதிவில் விளக்கமளிக்கிறேன்)

இம்முறை சூலமங்கை, பசுபதிமங்கை, நல்லிமங்கை மற்றும் தாழமங்கை கோவில்களை தரிசித்தேன். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் கீழே,

சூலமங்கை

சூலமங்கை

பசுபதிமங்கை

பசுபதிமங்கை

பல்லக்கு

நல்லிமங்கை


நல்லிமங்கை

தாழமங்கை




Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena