Saturday 5 January 2013

பிச்சைப் பாத்திரம்.... - நான் கடவுள் (பிடித்த பாடல்)


பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே - என் ஐயனே - யாமொரு
பிட்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே - என் ஐயனே
பிண்டம் எனும்
எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய
உடம்பு எனும் - பிச்சைப் பாத்திரம்..

அம்மையும் அப்பனும் தந்ததால் - இல்லை
ஆதியின் ஊழ்வினை வந்ததால்
இம்மையை நானறியாததால் - இந்த
பொம்மையின் நிலையெனில்
உண்மையை உணர்ந்திட - பிச்சைப் பாத்திரம்..

அத்தனை செல்வமும் உன்னிடத்தில் - நான்
பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் - அதன்
சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒருமுறையா இல்லை இருமுறையா
பல முறை பலப்பிறபெடுக்க வைத்தாய்
புது வினையா ? பழ வினையா ?
கனம் கனம் தினம் எனை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துறத்துதே
அருள் அருள் அருள் என்று
அலைந்திடும் மனம் இன்று பிதற்றுதே

அருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய் - உன்
திருக்கரம் எனை அரவனைத்துனதருள் பெற – 
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்..

---- மற்றுமொரு இனிமையான பாடல், இளையராஜா வின் இசையில்.

0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena