Tuesday 28 January 2014

புத்தக காட்சி - 2014

சென்னை புத்தக காட்சி - 2014, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திருவிழா.
சென்ற ஆண்டு முழுவதும், என்னுடைய வாசிப்பிற்கான ரசனைக்கு ஒத்துப் போகும் புத்தக மதிப்புரைகளைப் பட்டியலிட்டு வந்துள்ளேன்.

அந்த பட்டியலுக்கு செயல் வடிவம் கொடுக்க YMCA மைதானத்தில் நடந்த சென்னை புத்தக காட்சி - 2014 க்கு சென்று வந்தேன்.

இம்முறை வாகன நிறுத்தும் இடத்திலிருந்து புத்தக காட்சி நடக்கும் YMCA கல்லூரி மெயின் கேட் வரை வேன் - ல் அழைத்துச் சென்றார்கள். 770 ஸ்டால்கள் கொண்ட பிரம்மாண்டமான இடம். வழக்கம் போல தமிழ் அறிஞர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பெயரில் நடை பாதைகள். குறுகலாக இல்லாமல் விஸ்தாரமாக தெரிந்தது.

வழக்கம் போல இம்முறையும் குழந்தைகளுக்கான CD, DVD ஸ்டால்கள், ஜூஸ் கடைகள் மற்றும் வித்தியாசமாக நித்தியானந்தர் மற்றும் சில சாமியார்களின் அரங்ககுகளும் இடம் பெற்றிருந்தன.

மனுஷ்ய புத்திரன், ஞாநி, சாரு நிவேதிதா, அராத்து மற்றும் சில சின்ன/பெரிய திரை நடிகர்களையும் மற்றும் பல வலைப் பூ எழுத்தாளர்களையும் சந்திக்க முடிந்தது.

வாங்கிய புத்தகங்கள்:

பெயர் - ஆசிரியர் - பதிப்பகம்; என்ற வரிசையில்.

1. சின்ன வயதினிலே - மெரினா - விகடன்
2. ஆறாவடு - சயந்தன் - தமிழினி
3. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் - மீனாக்ஷி
4. பெர்லின் இரவுகள் - கோ. கருணாமூர்த்தி - உயிர்மை
5. அன்சைஸ் - பா. ராகவன் - மதி நிலையம்
6. ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ண நிலவன் - நர்மதா
7. அடுத்த கட்டம் - என். சொக்கன் - மதி நிலையம்
8. பள்ளிகொண்டபுரம் - நீல. பத்மநாபன் - காலச்சுவடு
9. ஆதி மங்கலத்து விசேஷங்கள் - சு. கி. சிவகுமார் - விகடன்
10. எரியும் பனிக் காடு - இரா. முருகவேல் - விடியல்
11. ஒரு இந்திய கிராமத்தின் கதை - சரவணன் - சந்தியா
12. அடுத்த வீடு 50 மைல் - தி. ஜானகிராமன் - ஐந்திணை
13. எஸ்கேப் - சுரேகா - மதி நிலையம்
14. வட்டியும் முதலும் - ராஜு முருகன் - விகடன்
15. நம். 40 ரெட்டை தெரு - இரா. முருகன் - கிழக்கு
16. லிண்ட்சே லோகன் W/O  மாரியப்பன் - வா. மணிகண்டன் - யாவரும்.காம் 
17. ராஜீவ் காந்தி சாலை - விநாயக முருகன் - உயிர்மை
18. ஆஸ்டின் இல்லம் - சுஜாதா - கிழக்கு
19. ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் - எஸ். ராமக்ருஷ்ணன்
20. மங்கள இசை மன்னர்கள் - மணியன் - மணிவாசகர்
Read More

Thursday 23 January 2014

தமிழ் இனி மெல்ல சாகும்? - யார் சொன்னது?!


அதிஷா அவர்களின் வலைப்பூவில், சீனப் பெண் ஒருவர் சன் தொலைக்காட்சியில், சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் தமிழில் சரளமாக உரையாடி இருக்கிறார் என்று கூறியிருந்தார். மேலும் அதற்கான காணொளி இணைப்பையும் அளித்திருந்தார்.

அந்த காணொளியை மிகவும் ஆர்வத்துடன் பார்க்க நேர்ந்தது. சீன வானொலி தமிழ் பிரிவு இயக்குனர், கலைமகள் என்பவரின் பேட்டி அது. கலைமகள் என்ற பெயர் அவரின் தமிழ் மொழியின் மீதான பற்றின் காரணமாக அவரின் ஆசிரியர் சூட்டியதாக கூறினார். அவரால் முடிந்த வரையில் ஆங்கில கலப்படமின்றி அவரால் தமிழில் உரையாட முடிந்தது. அவ்வளவு அட்சர சுத்தமாக தமிழில் உரையாடினார். 

சீன மொழி மட்டுமல்லாது, வேற்று நாட்டு மொழி ஒன்றை படிக்க ஆர்வப்பட்டு, இந்திய மொழிகளில் தமிழை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் தமிழ் கலாசாரம், கோவில்கள்  மற்றும் பண்பாடு என்று குறிப்பிட்டார். மேலும் அவர், 2013 ஆண்டை  ஈராயிரத்து பதிமூன்று என்று உச்சரித்தது மிகவும் ஆச்சரியம். 

இந்தியாவில் முதலில் பார்த்த நகரம் சென்னை என்றும் தமிழ் உணவுகளில் இட்லி, மசாலா தோசை ஆகியவை பிடித்திருக்கிறதாகவும் கூறினார்.

மேலும், சீனாவில் இன்ப உலா என்ற சீன பயண அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும், சீன - தமிழ் அகராதி தயார் செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தமிழர்களாக இருந்தும், அவர்களால் சாதாரண தமிழில் கேள்விகளை கேட்க முடியவில்லை. சாதாரணமாக உரையாடினால் எங்கு ஆங்கிலம் கலந்து விடுமோ என்ற அச்சத்தால் செந்தமிழில் தான் பேசினர். மேலும், கலைமகள் திருக்குறள் (நன்றி மறப்பது நன்றன்று... என்ற), தமிழ் பாடல் பாடியதும் மிகுந்த ஆச்சர்யமே.

அந்த காணொளிக்கான சுட்டி: http://www.youtube.com/watch?v=DoZp0AZ94ME 



Read More

Thursday 2 January 2014

2014 - புத்தாண்டு கொண்டாட்டங்கள்


Happy New Year - 2014

புத்தாண்டு தொடக்கம் Shalom Mansion ல் நண்பர்களுடன் வழக்கம் போல் கொண்டாடி முடித்தாயிற்று. இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஏனோ களை கட்டவில்லை என்றே தோன்றுகிறது.

01-01-2014: மிகச் சமீபத்தில் திருமலைக்கு சென்று பெருமாளை தரிசித்தபடியால் இம்முறை மேற்கு மாம்பலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில்  புத்தாண்டு தரிசனம். வடபழநி முருகனையும் தரிசித்துவிடவேண்டும் என்று மனது அடித்துக் கொண்டமையால் வடபழநி ஆண்டவரை சேவிக்க கோவில் வரை சென்றாகிவிட்டது. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம். Rs. 100, Rs. 50 மற்றும் தர்ம தரிசனம் என வகைபடுத்தியும் மிக அதிகமான கூட்டம். Q வில் நின்றால் 3 மணி நேரமாவது ஆகும் எனப் பட்டதால், வடபழனி ஆண்டவரை கோபுர தரிசனம் செய்து விட்டு நடையை கட்டினேன்.

நேரே மாயாஜால் பயணம். (அது என்ன மாயமோ தெரியவில்லை, ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் மாயாஜாலில் மட்டுமே டிக்கெட் கிடைக்கின்றது!!!). கிழக்கு கடற்கரை சாலையில் போகிற வழி எங்கும் புகழ் பெற்ற கோவில்கள் (சாய் பாபா, ISKCON, பூரி ஜெகந்நாதர் etc.), உணவகங்கள் அதிகம் இருப்பதாலும் விடுமுறை தினத்தன்று இந்த சாலை அதிகபட்ச மக்களால் பயன் படுத்தப்படுவதால் எங்கு காணினும் போக்குவரத்து நெரிசல். 

நண்பர்களுடன் மாயாஜாலில் ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா மற்றும் பலர் நடித்த "என்றென்றும் புன்னகை" திரைப்படம் பார்த்தேன். (மேற்கூறிய காரணத்தால் அரை மணி நேரம்  தாமதமாகத்தான் பார்க்க ஆரம்பித்தேன்). ஒரு வித்தியாசமான கதைக்களம். திருமணமே செய்ய மறுக்கும் இளைஞர்கள், சூழ்நிலைகளினால் மாறி திருமணம் செய்து கொள்ளும் கதை.

திரைப்படம் முடிந்தபின், சோழிங்க நல்லூரில் இல்ல ISKCON கோவில் சென்று ராதா கிருஷ்ணரை வழிபட்டோம். கோவிலின் அமைப்பு  மிக நேர்த்தியான வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளது.  ISKCON கோவில் கட்டுமானம் பிற ISKCON கோவிலைப் போலவே இருக்கின்றது. முன்பொருமுறை பெங்களூரு ISKCON கோவில் சென்று வந்திருக்கிறேன்.

மாலை மீண்டும், ECR ல் பயணித்து வேட்டுவான்கேணி பகுதியில் உள்ள "BASERA" என்ற சிறப்புக் கூறு உணவகத்தில் உணவருந்தினோம். BASERA உணவகம் ஒரு Garden Theme ல் உருவாக்கப்பட்டுள்ளது. இருட்டான அந்த Garden அமைப்பில், மேஜையில் மெழுகுவர்த்தி வெளிச்சம் தான். (ஆங்கிலத்தில், Candle Light Dinner என்கிறார்கள்).

மொத்தத்தில், வழக்கம் போல ஒரு புத்தாண்டு தினத்தை மகிழ்வுடன் கொண்டாடிய நிறைவுடன் கலைந்தோம்.
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena