Thursday 23 January 2014

தமிழ் இனி மெல்ல சாகும்? - யார் சொன்னது?!


அதிஷா அவர்களின் வலைப்பூவில், சீனப் பெண் ஒருவர் சன் தொலைக்காட்சியில், சூரிய வணக்கம் நிகழ்ச்சியில் தமிழில் சரளமாக உரையாடி இருக்கிறார் என்று கூறியிருந்தார். மேலும் அதற்கான காணொளி இணைப்பையும் அளித்திருந்தார்.

அந்த காணொளியை மிகவும் ஆர்வத்துடன் பார்க்க நேர்ந்தது. சீன வானொலி தமிழ் பிரிவு இயக்குனர், கலைமகள் என்பவரின் பேட்டி அது. கலைமகள் என்ற பெயர் அவரின் தமிழ் மொழியின் மீதான பற்றின் காரணமாக அவரின் ஆசிரியர் சூட்டியதாக கூறினார். அவரால் முடிந்த வரையில் ஆங்கில கலப்படமின்றி அவரால் தமிழில் உரையாட முடிந்தது. அவ்வளவு அட்சர சுத்தமாக தமிழில் உரையாடினார். 

சீன மொழி மட்டுமல்லாது, வேற்று நாட்டு மொழி ஒன்றை படிக்க ஆர்வப்பட்டு, இந்திய மொழிகளில் தமிழை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் தமிழ் கலாசாரம், கோவில்கள்  மற்றும் பண்பாடு என்று குறிப்பிட்டார். மேலும் அவர், 2013 ஆண்டை  ஈராயிரத்து பதிமூன்று என்று உச்சரித்தது மிகவும் ஆச்சரியம். 

இந்தியாவில் முதலில் பார்த்த நகரம் சென்னை என்றும் தமிழ் உணவுகளில் இட்லி, மசாலா தோசை ஆகியவை பிடித்திருக்கிறதாகவும் கூறினார்.

மேலும், சீனாவில் இன்ப உலா என்ற சீன பயண அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும், சீன - தமிழ் அகராதி தயார் செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தமிழர்களாக இருந்தும், அவர்களால் சாதாரண தமிழில் கேள்விகளை கேட்க முடியவில்லை. சாதாரணமாக உரையாடினால் எங்கு ஆங்கிலம் கலந்து விடுமோ என்ற அச்சத்தால் செந்தமிழில் தான் பேசினர். மேலும், கலைமகள் திருக்குறள் (நன்றி மறப்பது நன்றன்று... என்ற), தமிழ் பாடல் பாடியதும் மிகுந்த ஆச்சர்யமே.

அந்த காணொளிக்கான சுட்டி: http://www.youtube.com/watch?v=DoZp0AZ94ME 



0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena