Tuesday 12 March 2013

பாரதி !!!

"யோக சக்தி" என்னும் தொகுப்பில், மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் கவிதை, பல நேரத்தில் வாழ்க்கையில் தூண்டுகோலாக அமைந்தது.


தேடிச் சோறுநிதந் தின்று - பல 
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் 
வாடித் துன்பமிக உழன்று - பிறர் 
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல 
வேடிக்கை மனிதரைப் போலே - நான் 
வீழ்வேனென்று நினைத்தாயோ?

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் 
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி 
என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் 
கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங்கொண்டிருக்கச் செய்வாய்!

0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena