Saturday 2 July 2011

படித்ததில் பிடித்தவை - ஈழம் இன்று !...

உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்க, உறவுச் சொந்தங்கள் வெறுங் கையை பிசைந்து கொண்டு நிற்க, ஈழத்தில் அரங்கேறிய கொடூரங்களை உங்கள் மனசாட்சிக்கு அருகே கொண்டு வந்து நிறுத்தும் காரியத்தை செய்திருக்கிறது இந்தப் புத்தகம்.

முதல் முப்பது ஆண்டுகள் அஹிம்சை ஆர்பாட்டங்களாலும், அடுத்த முப்பது ஆண்டுகள் ஆயுத ஆர்ப்பரிப்புகளாலும் உச்சரிக்கப்பட்ட ஈழத் தமிழர் உரிமை, இன்னமும் கேட்பாரற்ற அனாதையாகவே கிடக்கிறது. கண்களில் வழியும் நீரைத் துடைக்கவும், ஆதரவுக் கரம் இன்றி அல்லலுறும் மக்களுக்காக பரிந்து பேசும் முயற்சியாகவே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றுப் புத்தகங்களில் கண்ணீரால் மட்டுமே எழுதப்படும் ஒரு இனத்தின் கதை இது!

ஆசிரியர்: ப. திருமாவேலன்
நன்றி : விகடன் பிரசுரம்

0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena