Saturday 20 August 2011

பொறியியல் கல்லூரிகளில் 44 ஆயிரம் இடங்கள் காலி!!

இது ஒரு ஒரு முன்னாள் பொறியியல் கல்லூரி மாணவனின் ஆதங்கம். ஓவ்வொரு வருடமும் அரசு புதிய தனியார் பொறியியல் கல்லூரிகளை துவங்க இசைவதற்கு பதிலாக, இருக்கின்ற பொறியியல் கல்லூரிகளின் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆவண செய்ய வேண்டும். ஏற்கனவே, பொறியியல் பட்டங்களை கையில் வைத்துக் கொண்டு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருப்போர்  பலர்.

சில கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. விண்ணப்பித்தோர் பலர் இருக்க, இந்த 44 ஆயிரம் இடங்களும் மாணவர்களால் தேர்வு செய்யப்படவில்லை என்பதே உண்மை. அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வீடு இருப்பதைப் போல கல்லூரியும் இருக்கின்றது. இரண்டு முறைக்கு மேல் அரசில் எந்தப் பதவியில் இருந்தாலும் அவருக்கு கல்லூரி இல்லை என்றால் அது ஒரு தவறான செய்கையாக கருதுகின்றனர். (ஒரு சிலரை தவிர?)


வருகின்ற கல்வி ஆண்டிலாவது இந்த அளவு காலியிடங்கள்  இல்லாத மாணவர் சேர்க்கையாக இருக்க வேண்டும் என விரும்பும்....

0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena