Showing posts with label ஆ. ப. ஜெ. அப்துல் கலாம். Show all posts
Showing posts with label ஆ. ப. ஜெ. அப்துல் கலாம். Show all posts

Thursday, 30 July 2015

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் - அஞ்சலி



ஏழ்மையில் பிறந்து, எழுச்சி அடைந்து,
எளிமையை விரும்பி,
எண்ணியவையை சாதித்த,
எதார்த்த உள்ளமே!!

எத்தனை எழுச்சி உரைகள்,
அத்தனையும் புதிய முயற்சிக்கான
வரைமுறைகள்!!

எத்தனை அறிவியல் ஆராய்ச்சிகள்,
அத்தனையும் நாட்டின் வளர்ச்சிக்கான படிகள்!!

எத்தனை விருதுகள் கையில்,
அத்தனையும் தலையில் ஏற்றாத
உழைப்பின் உருவ வடிவங்கள்!!

ஓய்வுகாலத்திலும் ஓயாமல் ஒருமனதாய்
மாணவர்களுக்காக, இளைஞர்களுக்காக,
மக்களுக்காக பணியாற்றிய
பெருமைக்குரிய பேராசிரியரே!!!

உங்கள் இழப்பு எக்காலத்திலும் ஈடு மட்டுமல்ல
சமன் செய்யக் கூட இயலாது!!!

நன்றி: த. ராஜ் குமார் (RCS) 
Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena