Saturday 27 July 2013

ஷாலோம் மேன்ஷன்


ஷாலோம் மேன்ஷன்:

2004 ஆண்டு டிசம்பர் மாதம், Engineering Project செய்வதற்காக கும்பகோணத்திலிருந்து இரவு புறப்பட்டு காலையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி நண்பன் ராகவேந்திரா விற்கு தொடர்பு கொண்து ஷாலோம் மேன்ஷன் எங்கே உள்ளது என்று தொலை பேசியபோது, ரயில் நிலையத்திலிருந்து மாம்பலம் தபால் நிலையம் அருகே வந்து தொலை பேச சொன்னார்.

மாம்பலம் போஸ்டல் காலனி வரை தேடி விட்டு ஷாலோம் மேன்ஷன் கண்டுபிடிக்க முடியாததால், மறுபடியும் நண்பனுக்கு தொலைபேசியபோது தவறான பாதையில் சென்றுவிட்டதாக கூறவே, அங்கிருந்து விசாரித்து சரியான விலாசத்திற்கு வந்தேன்.

ஷாலோம் மேன்ஷனில் தங்கி Engineering Project முடித்த பிறகு மீண்டும் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2013 மே மாதம் வரை Room No. 42 ல் சென்னை வாழ்க்கையில் பல தரப்பட்ட நிகழ்வுகள், நண்பர்களின் சந்திப்புகள், புதிய நண்பர்களின் அறிமுகங்கள் நடந்தேறின.

மாம்பலம் பகுதி ஓர் அதிசயமான பகுதி. காரணம், ஒரு ரயில்வே ஸ்டேஷன் மட்டுமே மனித நெரிசலில் இருந்தும், வணிக நிறுவனங்களில் இருந்தும்; இதர பிரிவினிருந்தும் பிரிக்கின்றது.

மாம்பலம் பகுதி குடியிருப்புக்கு ஏற்ற பகுதி. பேருந்து, ரயில், உணவகங்கள், மார்கெட் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது.

என்றுமே மறக்க முடியாத பல நினைவுகளை ஷாலோம் மேன்ஷனும் மாம்பலம் பகுதியும் எனக்கு அளித்திருக்கின்றன. 50 ஆவது பதிவில் இதை பகிர்ந்து கொள்ள மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.


0 - நண்பர்களின் கருத்துக்கள்:

Post a Comment

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena