Wednesday, 10 July 2013

குடமுருட்டி - இலங்கை கிளிநொச்சியிலும் ...

குடமுருட்டி - காவேரி நதியின் முக்கிய கிளை நதி, "பூர்வ காவேரிஎன்பது இந்நதியின் பழைய பெயர். குடமுருட்டி ஆறு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் இருந்து காவிரியின் கிளை நதியாகிறது.

சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, குடமுருட்டி எனும் நதி இலங்கை, கிளிநொச்சி பகுதியிலும் இருப்பதாகக் கண்டேன். ஒரு நாட்டில் உள்ள நதியின் பெயர், மற்றொரு நாட்டில் அறியப்படுவது சாதாரணம். (உதாரணம்: சிந்து நதி பாகிஸ்தானிலும் உள்ளது). என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை நிலப் பரப்பில் பிரிந்துள்ள நாடுகளில் இவ்வாறு இருப்பது இயற்கை. 

ஒரு தீபகற்பத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் பாயும் நதி, அருகிலிருக்கும் ஒரு தீவிலும் பாய்கின்றது என கேள்விப் படும் போதே ஆச்சர்யமாக இருக்கின்றது. 

இரண்டு காரணங்கள்.

1. நதியின் பெயர் மட்டும் ஒற்றுமையாக இருக்கலாம்.
2.முன்னொரு காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை இணைந்திருந்த நாட்களில் இந்நதி இலங்கை பிரதேசத்தில் பாய்ந்திருக்கலாம்.

இதன் விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கின்றேன்.தற்போது, குடமுருட்டி கிளிநொச்சியின் அருகே உள்ள பூநகரி எனும் ஊரில் ஓடிக் கொண்டிருக்கிறது. கிளிநொச்சியின் பழம்பெறும் கிராமங்களை பூநகரி கொண்டுள்ளது. பூநகரியின் மொட்டைக் கறுப்பன் அரிசி உலகப் பகழ் பெற்றது.

மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். 


Read More

Saturday, 6 July 2013

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் யோகா வகுப்புக்காக (ஆம்! மிக தாமதமான முடிவுதான்), சென்னை மாம்பலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு  சென்று வருகிறேன்.

வகுப்பு காலை 05:30 மணி முதல் 07:00 மணி வரை பள்ளியின் மூன்றாம் மாடியில். பள்ளியில் உள்ள UKG வகுப்பு கரும் பலகை கண்ணில் பட்டது. என்ன தான் பாடம் சொல்லித் தந்திருக்கின்றனர் என்று கவனித்தேன்.

கரும் பலகையின் மேல் புறத்தில் வலது ஓரம் நாள் மற்றும் கிழமை, இடது புறம் பதிவு மற்றும் வருகை. (வழக்கம் போல) நடுவில் வழக்கமாக ஏதாவது பொன்மொழிகள் எழுதுவது உண்டு. 

UKG வகுப்பில் இவ்வாறு எழுதியிருந்தது.

"நீ நுழைந்துள்ளது பள்ளிக் கூடத்தின் வகுப்பறைக்குள் மட்டுமல்ல... 
 உன் வாழ்க்கைக்குள்ளும் தான்..."




Read More

Saturday, 29 June 2013

History of Spectacles

நல்லா கண்ணைத் துடைச்சுக்கிட்டு பாருங்க... நான்தாங்க உங்க 'மூக்குக் கண்ணாடி’ பேசுறேன். விதவிதமான கண்ணாடிகளைப் போட்டு அசத்துறீங்க. சிலர் அடிக்கடி உடைச்சுடுறீங்க. மறந்து எங்கேயாவது வெச்சுடுறீங்க. நான் எப்படி எல்லாம் உருவாகி வருகிறேன் என்று தெரிந்தால், அப்படிப் பண்ண மாட்டீங்க தானே, வாங்க சொல்றேன்... கண்ணாடி மற்றும் ஃபிரேம் ஆகியவை பொதுவாக எனது பாகங்கள் என்றாலும், அந்த இரண்டு பிரதான பாகங்களுக்குள் சில பாகங்கள் உண்டு.

ஆரம்பக் காலத்தில் கண்ணாடி (குவி மற்றும் குழி) லென்ஸைக் கொண்டு என்னைச் செய்தார்கள். இப்போதும் பிரத்யேகமாய் ஆர்டர் கொடுத்தால், கண்ணாடியாலும் செய்வது உண்டு. என்றாலும், 80 சதவிகித மூக்குக் கண்ணாடிகளைப் பிளாஸ்டிக் லென்ஸ்களைக் கொண்டே செய்கிறார்கள். தொழிற்சாலையில் இருந்து நான் முழுவதுமாய் தயாராகி வெளியே வர 60 நாட்கள் ஆகின்றன. 'பாலிகார்பனேட்’ எனும் பிளாஸ்டிக்கில் இருந்து கண் துண்டு (Eye piece) எனப்படும் 'பிளாஸ்டிக்’ கண்ணாடிகளை முதலில் உருவாக்குகிறார்கள். அது, 75 இன்ச் தடிமன் கொண்டது.  

இதை, வட்ட வடிவ வில்லைகளாகத் தேய்க்கவும், பார்வை லென்ஸாக மாற்றவும் கர்வ்-ஜென்ரேட்டர் எனப்படும் கருவி பயன்படுகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி, 25 இன்ச் தடிமன் கொண்டவையாக மாற்றுகிறார்கள்.

அந்த வில்லையை எந்த வகைக் கண் கண்ணாடியாக உருவாக்க வேண்டும், அதில் எந்த மாதிரியான வேலைப்பாடு செய்ய வேண்டும்... என்று கணிப்பொறி மூலம் வடிவமைத்து, அடுத்தக் கட்ட வேலை தொடங்குவார்கள்.

இங்கே லென்ஸில், பார்வை மையம் (Optical centre) தேர்வு செய்யப்படும். இதற்கு, 'லென்ஸோ மீட்டர்’ எனும் கருவி பயன்படுகிறது. காரீய கலவைப் பூச்சு மூலம் எட்டப் பார்வை, கிட்டப் பார்வை லென்ஸ்களாக அவை மாற்றுவதற்கு, ஒவ்வொரு 'பிளாங்க்’ வில்லையாக எடுத்து, அதைக் கவனத்துடன் பிளாக்கர் கருவியில் பதப்படுத்துவார்கள்.

அலுமினியம் ஆக்சைடு, தண்ணீர் மற்றும் பாலிமரில் லென்சை, பல மணி நேரம் ஊற வைப்பார்கள். 'டிண்ட்’ எனப்படும் கரும்பூச்சை சேர்த்து, கண் கண்ணாடியில் கூலிங்கை ஏற்றுவார்கள். பிறகு, வலது கண் கண்ணாடி, இடது கண் கண்ணாடி பொறிக்கும் வேலை நடக்கும். பிறகு, கண்ணாடிக் கடைகளுக்கு வருவேன்.

எனக்குக் கவசமாக இருக்கும் ஃபிரேம்கள், ஸ்டெயின்லெஸ் கம்பிகள், அலுமினியம், பிளாஸ்டிக் என விதவிதமாகத் தயாராகின்றன. சமீப காலமாக அலுமினியம் ஆக்ஸைடு, பாலிமர் மற்றும் உதிர்ந்த பிளாஸ்டிக் துகள்களில் இருந்துகூட ஃபிரேம்கள் தயாராகின்றன.
நீங்கள், கண் டாக்டரிடம் போகிறீர்கள். அங்கே எழுத்துகள் தெரிகிறதா எனப் பரிசோதிக்க ஒரு சார்ட் இருக்கும். அதை படிக்கச் சொல்வார்கள். அதற்கு ஸ்நெல்ஸ் சார்ட் என்று பெயர். காரணம், அதைக் கண்டுபிடித்தவர், பெடர் ஸ்நெல்ஸ்.

உங்களின் பார்வைக் குறைபாடுக்கு ஏற்ப, பொருத்தமான வலது கண் லென்ஸ், இடது கண் லென்ஸ் வகைகளை டாக்டர் உங்களுக்குப் பரிந்துரை செய்வார்.. அதற்கு ஏற்ற வகையில் கண்ணாடிக் கடைக்காரர், நீங்கள் தேர்வு செய்த ஃபிரேமில் கண்ணாடியைப் பொருத்தி, சரியான கோணங்களில் லென்ஸோ மீட்டரில் வேறுபாடு செய்து, என்னை அழகாக உருவாக்கிக் கொடுப்பார்.

இப்படித்தான் நான் உன்னிடம் வந்து சேருகிறேன். கான்டாக்ட் லென்ஸ் என்று என் ஒன்றுவிட்ட சகோதரனும் இருக்கிறான். இவனை அணிய, ஃபிரேம் தேவை இல்லை. குட்டியாக பிளாஸ்டிக் ஷீட் போல இருப்பான். அதைக் கண்ணில் தினமும் பொருத்திக்கொள்ள வேண்டும்.

எந்த வகையாக இருந்தாலும் என்னைத் துடைத்து சுத்தமாகப் பராமரித்தால், நீண்ட காலம் உழைப்பேன். அத்துடன், கண்களுக்கு நன்மை பயக்கும் கீரை போன்ற உணவுகளைச் சாப்பிட்டால், என்னை அணிய வேண்டிய அவசியமே இருக்காது. செய்வீர்களா?


Read More

Saturday, 18 May 2013

மேகமலை - பயணம்



அகரம் நண்பர்கள் மேகமலை பயணத்திற்காக முடிவு செய்த போது 3 நாட்களும் வந்திருந்து விழாவை (ஹி.. ஹி..) பயணத்தை சிறப்பிக்கலாம் என்று நினைத்தேன். வழக்கம் போல அலுவலக பணிச்சுமை காரணமாக 2 நாட்கள் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது.

வெள்ளிக் கிழமை இரவு KPN Travels பேருந்து மூலமாக  சின்னமனூர் சென்று, அங்கிருந்து மேகமலை செல்வதாக திட்டம். (நண்பர்கள் அனைவரும் வெள்ளி காலையே மேகமலை சென்றிருந்தனர்). மேகமலையில் BSNL Tower மட்டுமே உண்டு என்பதால் தகவல் தொடர்பு மிகவும் கடினம்.

மேகமலை சென்ற நண்பர்கள், அங்கு நான் எங்கு வந்து சேர வேண்டும், சின்னமனூர் வந்து யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சொல்ல நினைத்து தகவல் தொடர்பின்மை காரணமாக மிகவும் சிரமப்பட்டார்கள். வெள்ளி இரவு சின்னமனூர் பேருந்து ஏறும் வரை நான் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் முதல் 5 இலக்க கைப்பேசி எண் மட்டும் தான் என்னிடம் இருந்தது.

அதன் பிறகு, பல பிரயத்தனங்களுக்குப் பிறகு சின்னமனூரில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும், எந்த பேருந்தில் மேகமலை செல்ல வேண்டும், மேகமலையில் எந்த Cottage க்கு வர வேண்டும் என்று அறிந்து கொண்டேன்.

சரியாக சனிக் கிழமை  காலை  07:45 மணிக்கு சின்னமனூர் வந்து சேர்ந்தேன். சின்னமனூர் பேருந்து நிலையத்தில் Refresh செய்து கொண்டு 10:00 மணிக்கு மேகமலை செல்லும் பேருந்திற்காக காத்திருந்தேன். (மேகமலை வழியாக இரவங்கலாறு) பேருந்து சரியாக 09:15 மணிக்கெல்லாம் வந்து விட்டது. மலைப் பாதையில் செல்லும் பேருந்து என்பதால் குறிப்பிட்ட இருக்கைகள் மட்டுமே. அது மட்டுமல்லாது பேருந்தில் ஏறுவதற்கு முன் ஒப்புகை சீட்டு வாங்க வேண்டும் என்றார்கள். நேரக் காப்பாளர் Rs. 3 பெறுமான சீட்டை Rs. 5 என்றார். வேறு வழியின்றி வாங்கிக் கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். சரியாக 10:15 க்கு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த பொது அப்பாடா என்றிருந்தது.  ஆனால், அங்கு தான் ஒரு Twist.

பேருந்து நேராக ஒரு தனியார் நான்கு சக்கர Workshop க்கு சென்று நின்றது. என்னவென்று விசாரித்தால் முன் பக்க Axle கழன்று விட்டதாகவும் அதனை சரி செய்து கொண்டுதான்  புறப்பட முடியும் என்று கூறினார்கள்.   நல்ல வேளையாக அந்த தவறு கீழேயே கண்டு பிடித்தாகிவிட்டது. அரசு தொலை தூரப் பேருந்துகளை மட்டுமல்லாது மலைப் பாதை பேருந்துகளையும் அவ்வப்போது கவனிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றேன். பேருந்து சரியாக 11:15 மணிக்கு புறப்பட்டது.

சின்னமனூர் - மேகமலை மலைப் பாதை 30 ஆண்டுகளுக்கு முன்பாக போடப் பட்டது என்று கூறினார்கள் நண்பர்கள். அதற்கேற்றார்போல் சாலை மிகவும் பயனற்றுப் போயிருந்தது. 18 கொண்டை ஊசி வளைவுகள். நல்ல கை தேர்ந்த ஓட்டுனர்களால் மட்டுமே வாகனங்களை செலுத்த முடியும். டயர்கள் நல்ல பிடிப்பு உள்ளதாக இருக்க வேண்டும். ஒரு வழியாக மதியம்  01:15 மணி அளவில் மலையில் 20 KM கடந்து நண்பர்கள் தங்கியிருந்த "மேகமலை Residency" அமைந்திருக்கின்ற "அந்துவன் Estate" வந்தாகிவிட்டது. நண்பர்கள் என் வருகைக்காக காத்திருந்தனர்.

முதல் நாள் (என்னுடைய...) பயணத் திட்டத்தில் "மகாராஜா மெட்டு" என்ற ஓர் இடத்திற்கு பயணப் பட்டோம். செல்லும் வழி எங்கும் பச்சை கம்பளங்களை விரித்தார்ப் போல் தேயிலைத் தோட்டங்கள். எங்களுடைய பயண முகவர் தேயிலை பயிரிடுதல் தொடங்கி தேனீர் பருகும் வரை ஒவ்வொரு நிலையையும் விளக்கினார். வழியில் மணலாறு, வன்னியாறு ஆகிய இடங்களில் இருந்த சிறு அணைக் கட்டுகளைப் பார்வையிட்டோம். மேகமலைப் பகுதி ஹைவேவிஸ் என்று அழைக்கப்படுகிறது. 

மேகமலைப் பகுதியில் மொத்தமே 5 க்கும் குறைவான Cottage கள் உள்ளன. அவற்றில் அரசின் பயணியர் மாளிகையும், தாங்கும் விடுதியும் அடக்கம். அது மட்டுமல்லாது மிகவும் குறைவான அளவிலேயே Tea Shop களும் உணவு விடுதிகளும் உள்ளன.  

மகாராஜா மெட்டு பகுதியை அடைந்தவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு மலையேறத் தொடங்கினோம். சுமார் 1.5 KM மலையேறிய பிறகு மகாராஜா மெட்டு வந்தடைந்தோம். அங்கிருந்து பார்த்தால் தேனி  நகரம், போடி நகரம் தெரிகின்றது மற்றொரு புறம் கேரளாவின் தேக்கடி யைக் காண்பிக்கிறார்கள். அவ்வளவு வுயரத்தில் ஒரு சிதிலமடைந்த கோவில் ஒன்றும், சிறு கோவில் ஒன்றும் அரசின் நீரேற்று நிலையம் ஒன்றும் உள்ளது. உண்மையிலேயே அவ்வளவு ரம்மியமான இடம். நல்ல சீதோஷ்ண நிலை. 360 Degree View ல் தாராளமாக படம் எடுக்கலாம். 

சற்று இளைப்பாறிவிட்டு, அங்கிருந்து கீழிறங்கி எங்களுடைய மதிய (மாலை) உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பச்சை தேயிலைத் தொட்டங்களினூடே பயணப் பட்டு, தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலை களையும் பார்த்து விட்டு எங்கள் தங்குமிடத்துக்கு வந்தோம். 

அன்றிரவு உணவை முடித்துக் கொண்டு, நண்பர்களின் உதவியுடன் ஒரு புதிய வகையான Card Game "UNO" கற்றுக் கொண்டு விளையாடி விட்டு, Night Trekking எனப்படும் இரவு நேர காட்டுப் பயணத்தை மேற்கொண்டு விட்டு உறங்கலானோம்.

மறுநாள் காலை மிகவும் முன்னதாகவே எழுந்து தயாராகி மீண்டும் ஒரு "Road Walk" சென்றோம். அந்த காலை வேலையில் மேகமலை என்ற பெயருக்கேற்ப மேகங்கள் மலைகளைத் தொட்டுக் கொண்டு செல்கின்ற காட்சி  வார்த்தைகளினால் விவரிக்க முடியாத அனுபவமாக இருந்தது.

மேகமலைக்கு விடை கொடுத்துவிட்டு மலையிலிருந்து கீழிறங்கி சின்னமனூர் வந்தோம். அதுவரை மிகவும் பொறுமையாக வாகனத்தை ஓட்டி வந்த எங்கள் ஓட்டுனர் சீரான சாலையைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியோடு வாகனத்தை தேக்கடி நோக்கி செலுத்தினார். 

வழியில் குமிளியில் காவல் சோதனைகளை முடித்துக் கொண்டு "பெரியார் புலிகள் சரணாலயம்" வந்து செர்ந்தோம். முல்லைப் பெரியார் அணை இந்த பகுதியில் தான் அமைந்துள்ளது. Boating செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கலானோம். பெரியார் ஆறு கிட்டத்தட்ட 145 அடி ஆழம் கொண்டது. இந்த ஆற்றில் தான் படகு சவாரி செய்யப்போகின்றோம். நுழைவுச் சீட்டு வாங்கிவிட்டு 01:45 மணிக்கு புறப்படும் படகில் சவாரி செய்யக் காத்திருந்தோம். 

காத்திருந்த நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் அங்கு நடந்த ஒரு சோக நிகழ்வான படகு கவிழ்ந்து 40 பேர் பலியான சம்பவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். 2 வகையான படகுகள்  சவாரிக்காக பயன் படுத்தப் படுகின்றன. அளவில் சிறியது மற்றும் பெரியது. இரண்டு இரண்டு அடுக்குகளை உடையது. படகில் எங்களுக்கான இருக்கைகள் முதல் அடுக்கில் இருந்தது. பாதுகாப்புக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1:30 மணி நேரப் படகு சவாரி இது.

படகு சவாரி தொடங்கும் நேரத்தில் லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது. ரம்மியமான ஒரு சூழல் அது. எங்கு பார்த்தாலும் தண்ணீர். நடு நடுவே உயர்ந்த மரங்கள். தூரத்தில் காட்டு விலங்கினங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. பெரியார் ஆற்றின் நடுவே ஒரு Guest House ம் உண்டு. எங்கு நோக்கினும் தண்ணீர் மற்றும் மலைகள். 01:30 மணி நேர பயணத்திற்கு பிறகு படகு சவாரி நிறைவுற்றது. 

தேக்கடியில் இருந்து குமிளி வந்து வீட்டுக்குத் தேவையான திராட்சை, மிளகு மற்றும் இதர வகைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் தேனி நோக்கி புறப் பட்டோம். தேனியில் மாலை உணவு அருந்திவிட்டு 2 நாட்களின் நினைவுகளை அசை போட்டுக் கொண்டே சென்னை நோக்கிப் பயணமானோம்.




Read More

Friday, 29 March 2013

கை பேசி


கிட்டத்தட்ட கை இருக்கும் அனைவரும் பயன்படுத்தும் சாதனமாக மாறிவிட்டது கை பேசி. (சிலர் ஒன்றுக்கும் மேலாக). உணவு, உடை, இருப்பிடம், கை பேசி என அடிப்படைத் தேவைகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்தியிருக்கிறது கை பேசி. விஷயத்துக்கு வருவோம்.....

கை பேசியின் பயன்கள் எண்ணிலங்கா. பயன்படுத்தும் வயது வரம்பு தற்போது > 3 ஆக இருக்கிறது. தொடர்பு கொள்ளுதல் அல்லது உரையாடல் என்ற அடிப்படை தேவைகளுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு பல விஷயங்களுக்காக பயன்படுத்தப் பட்டு வருகின்றது. வயதுக்கேற்ப அதன் தேவைகள் பிரித்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

  • மற்றவர்களை தொடர்பு கொள்ளுதல்,
  • குறுஞ்செய்திகள்
  • சிறு வயதினர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் விளையாடும் விளையாட்டுக்கள்.
  • இணையப் பயன்பாடு
  • புகைப்படங்கள் எடுத்தல் .....

இன்னும் எத்தனையோ... 
Read More

Wednesday, 13 March 2013

மஹா சிவராத்திரி - ஸ்ரீ காளஹஸ்தி தரிசனம்


10.03.2013 - மஹா சிவராத்திரி யை முன்னிட்டு ஸ்ரீ காளஹஸ்தி பெருமானை தரிசிக்க முந்தைய நாள் மாலையே சென்னையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீ காளஹஸ்தி வந்தடைந்தோம். 

சிவராத்திரிக்கு முந்தைய நாள் என்பதால் தேவஸ்தான தங்கும் அறைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தனியார் விடுதிகளுக்கோ கொழுத்த கொண்டாட்டம். அறை வாடகையெல்லாம் இரு மடங்கு உயர்த்தியிருந்தனர். நமக்கு வேறு வழி இல்லாது இரு மடங்கு வாடகையில் ஒரு அறையை பிடித்தோம். மாட வீதிகளில் விநாயகர், முருகர், ஞானபிரசுனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் வீதி உலா கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.

சிவராத்திரி அன்று (11.03.13) காலை 6 மணிக்கு கோவிலுக்குள் வந்து மதியம் 12 மணியளவில் மூலவரை தரிசனம் செய்துவிட்டு, அம்பிகையையும் தரிசனம் செய்தோம். சிவராத்திரியென்பதால் எந்த தோஷ, நிவாரண பூஜையும் இல்லை என்று கூறியிருந்தனர். 6 மணி நேரம் வரிசை ஒரு பாம்பு போல வளைந்து நெளிந்து சென்று சன்னதியை அடைந்தது. (கிட்டத் தட்ட ஒரு 4 கி. மீ இருக்கும் கோவிலுக்குள்ளேயே சுற்றியது). வயதானவர்களும், கைக்குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்களும் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகினர். 

சிவராத்திரியை முன்னிட்டு மாட வீதிகள், பொன்முகலிகை ஆறு, கண்ணப்பர் மலை ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. அவை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

சிவபெருமான் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.  
Read More

Tuesday, 12 March 2013

பாரதி !!!

"யோக சக்தி" என்னும் தொகுப்பில், மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் கவிதை, பல நேரத்தில் வாழ்க்கையில் தூண்டுகோலாக அமைந்தது.


தேடிச் சோறுநிதந் தின்று - பல 
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் 
வாடித் துன்பமிக உழன்று - பிறர் 
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிப் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல 
வேடிக்கை மனிதரைப் போலே - நான் 
வீழ்வேனென்று நினைத்தாயோ?

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் 
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி 
என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் 
கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங்கொண்டிருக்கச் செய்வாய்!

Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena