Tuesday, 6 August 2013

மேட்டூர் அணை - காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம்


கடந்த இரண்டு வருடமாக காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தண்ணீரே பார்த்திராத மக்களுக்கு இந்த வருடம் தமிழகத்தில் பருவ மழை மீதமுள்ள நிலையிலும், கர்நாடகத்தில் பெய்த மழையினால் நிரம்பியது மேட்டூர் அணை. அது மட்டுமல்லாது எண்ணற்ற விவசாயிகளின் மனதும் நிறைந்தது.

இந்த நல்ல வேளையில், மேட்டூர் அணை பற்றி....

ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.

மேட்டூர் அணையை வடிவமைத்தவர். அணையின் பிரதான பகுதியில் ஆள் உயர சிலையாக நின்று தான் வடிவமைத்த அணையை பார்த்தபடி நின்று கொண்டு இருக்கிறார்.

இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர். மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம்.மேட்டூர் அணையை இதுவரை இரண்டு முறை மின்னல் தாக்கியது. இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் காவிரி கரையோரமாக நிறைய நிலங்களும், விவசாயம் செய்யக் கூடிய ஆட்களும் இருந்தும் போதிய நீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை. இதை உணர்ந்த ஆங்கிலேயே அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்து இடத்தை தேடியது. 15 ஆண்டுகள் கழித்து அன்றைய ஆங்கிலேய அரசின் சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி காவிரியின் குறுக்கே அணைக் கட்ட உத்தர விட்டார். இந்த உத்திரவை போட்ட கவர்னர் ஸ்டான்லியின் பெயரால் மேட்டூர் அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிது.
இந்த அணையில் கடல் போல காட்சியளிக்கும் அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. அணையை கட்டிய பொறியாளர் டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை மேட்டூர் அணையின் சிற்பி அன்றும், இன்றும் புகழப்படுகிறார் இனி என்றும் புகழப்படுவார்.

இந்திய அளவிலான பெரிய அணைகளில் ஒன்றான இதன் உச்ச நீர் மட்ட அளவாக 120 அடி வரை நீரைத் தேக்கலாம். அதன் பிறகு ஓடிவரும் நீர் வரத்து யாவும் உபரியாக அணைக்கட்டில் நிற்காமல் நிரம்பாமல் தானாகவே வெளியேறிச் செல்லும் அற்புதமான இயற்கையுடன் இணைந்த கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும் அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ ஒருக்காலும் ஊறு விளைக்கமுடியாத தன்மைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்: 21.8.1934

அணைக் கட்ட ஆன செலவு: 4.80 கோடி

அணையின் நீளம்: 5.300 அடி

அணையின் கொள்ளளவு: 93.50 டி.எம்.சி.

அணையின் உயரம்: 214 அடி

அணையின் அகலம்: 171 அடி

அணையின் சேமிப்பு உயரம்: 120 அடி

அணையின் நீர்பிடிப்பு பரப்பளவு: 59.25 சசதுர மைல்

2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது.

அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களுக்கு மேட்டூர் தண்ணீர் போகிறது. மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அது மட்டுமல்லாமல், மேட்டூர் அணையை நம்பி 4000 மீனவர்கள் குடும்பங்களும் உள்ளன.

மேட்டூர் அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106, கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதன் கிளை நதிகளாக கொள்ளிடம், பொன்னியாறு, கல்லணை கால்வாய், வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்ற பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன வசதியை கொடுக்கிறது.

நன்றி - தினமலர்
Read More

Saturday, 27 July 2013

50 ஆவது பதிவு

50 ஆவது பதிவு:

வலை பதிவு உலகிற்கு வந்து சுமார் 8 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், முதலில் ஆரம்பித்த வலைப்பூவில் எழுத முடியவில்லை. பூர்வ காவேரி எனும் இந்த வலைப்பூவில் 49 இடுகைகளை முடித்து 50 ஆவது இடுகையை பதிவு செய்ய ஊக்கமளித்த கடவுளுக்கும், குடும்பத்தினர்க்கும் நன்றிகள் பல. மேலும், இந்த வலைப்பூவின் பெயர் சூட்டவும், எழுதுவதற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்த கவிஞர் ராணி திலக் அவர்களுக்கு நன்றி. 
Read More

ஷாலோம் மேன்ஷன்


ஷாலோம் மேன்ஷன்:

2004 ஆண்டு டிசம்பர் மாதம், Engineering Project செய்வதற்காக கும்பகோணத்திலிருந்து இரவு புறப்பட்டு காலையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கி நண்பன் ராகவேந்திரா விற்கு தொடர்பு கொண்து ஷாலோம் மேன்ஷன் எங்கே உள்ளது என்று தொலை பேசியபோது, ரயில் நிலையத்திலிருந்து மாம்பலம் தபால் நிலையம் அருகே வந்து தொலை பேச சொன்னார்.

மாம்பலம் போஸ்டல் காலனி வரை தேடி விட்டு ஷாலோம் மேன்ஷன் கண்டுபிடிக்க முடியாததால், மறுபடியும் நண்பனுக்கு தொலைபேசியபோது தவறான பாதையில் சென்றுவிட்டதாக கூறவே, அங்கிருந்து விசாரித்து சரியான விலாசத்திற்கு வந்தேன்.

ஷாலோம் மேன்ஷனில் தங்கி Engineering Project முடித்த பிறகு மீண்டும் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2013 மே மாதம் வரை Room No. 42 ல் சென்னை வாழ்க்கையில் பல தரப்பட்ட நிகழ்வுகள், நண்பர்களின் சந்திப்புகள், புதிய நண்பர்களின் அறிமுகங்கள் நடந்தேறின.

மாம்பலம் பகுதி ஓர் அதிசயமான பகுதி. காரணம், ஒரு ரயில்வே ஸ்டேஷன் மட்டுமே மனித நெரிசலில் இருந்தும், வணிக நிறுவனங்களில் இருந்தும்; இதர பிரிவினிருந்தும் பிரிக்கின்றது.

மாம்பலம் பகுதி குடியிருப்புக்கு ஏற்ற பகுதி. பேருந்து, ரயில், உணவகங்கள், மார்கெட் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது.

என்றுமே மறக்க முடியாத பல நினைவுகளை ஷாலோம் மேன்ஷனும் மாம்பலம் பகுதியும் எனக்கு அளித்திருக்கின்றன. 50 ஆவது பதிவில் இதை பகிர்ந்து கொள்ள மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.


Read More

Tuesday, 23 July 2013

Mobile Phone Etiquettes

Following is a list of do's and don'ts:

- Do respect those who are with you. When you're engaged face-to-face with others, either in a meeting or a conversation, give them your complete and undivided attention. Avoid texting or taking calls. If a call is important, apologize and ask permission before accepting it.

- Don't yell. The average person talks three times louder on a cellphone than they do in a face-to-face conversation. Always be mindful of your volume.

- Do be a good dining companion. No one wants to be a captive audience to a third-party cellphone conversation, or to sit in silence while their dining companion texts with someone. Always silence and store your phone before being seated. Never put your cellphone on the table.

- Don't ignore universal quiet zones such as the theater, church, the library, your daughter's dance recital and funerals.

- Do let voice mail do its job. When you're in the company of others, let voice mail handle non-urgent calls.

- Don't make wait staff wait. Whether it's your turn in line or time to order at the table, always make yourself available to the server. Making servers and other patrons wait for you to finish a personal phone call is never acceptable. If the call is important, step away from the table or get out of line.

- Don't text and drive. There is no message that is so important.

- Do keep arguments under wraps. Nobody can hear the person on the other end. All they are aware of is a one-sided screaming match a few feet away.

- Don't forget to filter your language. A rule of thumb: If you wouldn't walk through a busy public place with a particular word or comment printed on your T-shirt, don't use it in cellphone conversations.

- Do respect the personal space of others. When you must use your phone in public, try to keep at least 10 feet (three meters) between you and others.

- Do exercise good international calling behavior. The rules of cellphone etiquette vary from country to country.

Good cellphone etiquette is similar to common courtesy. Conversations and text exchanges have a tendency to distract people from what's happening in front of them. Cellphone users should be thoughtful, courteous and respect the people around them.

- The Protocol School of Washington (PSOW)
- PSOW's website is: www.psow.edu
Read More

Wednesday, 10 July 2013

குடமுருட்டி - இலங்கை கிளிநொச்சியிலும் ...

குடமுருட்டி - காவேரி நதியின் முக்கிய கிளை நதி, "பூர்வ காவேரிஎன்பது இந்நதியின் பழைய பெயர். குடமுருட்டி ஆறு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் இருந்து காவிரியின் கிளை நதியாகிறது.

சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, குடமுருட்டி எனும் நதி இலங்கை, கிளிநொச்சி பகுதியிலும் இருப்பதாகக் கண்டேன். ஒரு நாட்டில் உள்ள நதியின் பெயர், மற்றொரு நாட்டில் அறியப்படுவது சாதாரணம். (உதாரணம்: சிந்து நதி பாகிஸ்தானிலும் உள்ளது). என்னுடைய அறிவுக்கு எட்டிய வரை நிலப் பரப்பில் பிரிந்துள்ள நாடுகளில் இவ்வாறு இருப்பது இயற்கை. 

ஒரு தீபகற்பத்தில் உள்ள ஒரு மாநிலத்தில் பாயும் நதி, அருகிலிருக்கும் ஒரு தீவிலும் பாய்கின்றது என கேள்விப் படும் போதே ஆச்சர்யமாக இருக்கின்றது. 

இரண்டு காரணங்கள்.

1. நதியின் பெயர் மட்டும் ஒற்றுமையாக இருக்கலாம்.
2.முன்னொரு காலத்தில் இந்தியா மற்றும் இலங்கை இணைந்திருந்த நாட்களில் இந்நதி இலங்கை பிரதேசத்தில் பாய்ந்திருக்கலாம்.

இதன் விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கின்றேன்.தற்போது, குடமுருட்டி கிளிநொச்சியின் அருகே உள்ள பூநகரி எனும் ஊரில் ஓடிக் கொண்டிருக்கிறது. கிளிநொச்சியின் பழம்பெறும் கிராமங்களை பூநகரி கொண்டுள்ளது. பூநகரியின் மொட்டைக் கறுப்பன் அரிசி உலகப் பகழ் பெற்றது.

மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். 


Read More

Saturday, 6 July 2013

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் யோகா வகுப்புக்காக (ஆம்! மிக தாமதமான முடிவுதான்), சென்னை மாம்பலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு  சென்று வருகிறேன்.

வகுப்பு காலை 05:30 மணி முதல் 07:00 மணி வரை பள்ளியின் மூன்றாம் மாடியில். பள்ளியில் உள்ள UKG வகுப்பு கரும் பலகை கண்ணில் பட்டது. என்ன தான் பாடம் சொல்லித் தந்திருக்கின்றனர் என்று கவனித்தேன்.

கரும் பலகையின் மேல் புறத்தில் வலது ஓரம் நாள் மற்றும் கிழமை, இடது புறம் பதிவு மற்றும் வருகை. (வழக்கம் போல) நடுவில் வழக்கமாக ஏதாவது பொன்மொழிகள் எழுதுவது உண்டு. 

UKG வகுப்பில் இவ்வாறு எழுதியிருந்தது.

"நீ நுழைந்துள்ளது பள்ளிக் கூடத்தின் வகுப்பறைக்குள் மட்டுமல்ல... 
 உன் வாழ்க்கைக்குள்ளும் தான்..."




Read More

Saturday, 29 June 2013

History of Spectacles

நல்லா கண்ணைத் துடைச்சுக்கிட்டு பாருங்க... நான்தாங்க உங்க 'மூக்குக் கண்ணாடி’ பேசுறேன். விதவிதமான கண்ணாடிகளைப் போட்டு அசத்துறீங்க. சிலர் அடிக்கடி உடைச்சுடுறீங்க. மறந்து எங்கேயாவது வெச்சுடுறீங்க. நான் எப்படி எல்லாம் உருவாகி வருகிறேன் என்று தெரிந்தால், அப்படிப் பண்ண மாட்டீங்க தானே, வாங்க சொல்றேன்... கண்ணாடி மற்றும் ஃபிரேம் ஆகியவை பொதுவாக எனது பாகங்கள் என்றாலும், அந்த இரண்டு பிரதான பாகங்களுக்குள் சில பாகங்கள் உண்டு.

ஆரம்பக் காலத்தில் கண்ணாடி (குவி மற்றும் குழி) லென்ஸைக் கொண்டு என்னைச் செய்தார்கள். இப்போதும் பிரத்யேகமாய் ஆர்டர் கொடுத்தால், கண்ணாடியாலும் செய்வது உண்டு. என்றாலும், 80 சதவிகித மூக்குக் கண்ணாடிகளைப் பிளாஸ்டிக் லென்ஸ்களைக் கொண்டே செய்கிறார்கள். தொழிற்சாலையில் இருந்து நான் முழுவதுமாய் தயாராகி வெளியே வர 60 நாட்கள் ஆகின்றன. 'பாலிகார்பனேட்’ எனும் பிளாஸ்டிக்கில் இருந்து கண் துண்டு (Eye piece) எனப்படும் 'பிளாஸ்டிக்’ கண்ணாடிகளை முதலில் உருவாக்குகிறார்கள். அது, 75 இன்ச் தடிமன் கொண்டது.  

இதை, வட்ட வடிவ வில்லைகளாகத் தேய்க்கவும், பார்வை லென்ஸாக மாற்றவும் கர்வ்-ஜென்ரேட்டர் எனப்படும் கருவி பயன்படுகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி, 25 இன்ச் தடிமன் கொண்டவையாக மாற்றுகிறார்கள்.

அந்த வில்லையை எந்த வகைக் கண் கண்ணாடியாக உருவாக்க வேண்டும், அதில் எந்த மாதிரியான வேலைப்பாடு செய்ய வேண்டும்... என்று கணிப்பொறி மூலம் வடிவமைத்து, அடுத்தக் கட்ட வேலை தொடங்குவார்கள்.

இங்கே லென்ஸில், பார்வை மையம் (Optical centre) தேர்வு செய்யப்படும். இதற்கு, 'லென்ஸோ மீட்டர்’ எனும் கருவி பயன்படுகிறது. காரீய கலவைப் பூச்சு மூலம் எட்டப் பார்வை, கிட்டப் பார்வை லென்ஸ்களாக அவை மாற்றுவதற்கு, ஒவ்வொரு 'பிளாங்க்’ வில்லையாக எடுத்து, அதைக் கவனத்துடன் பிளாக்கர் கருவியில் பதப்படுத்துவார்கள்.

அலுமினியம் ஆக்சைடு, தண்ணீர் மற்றும் பாலிமரில் லென்சை, பல மணி நேரம் ஊற வைப்பார்கள். 'டிண்ட்’ எனப்படும் கரும்பூச்சை சேர்த்து, கண் கண்ணாடியில் கூலிங்கை ஏற்றுவார்கள். பிறகு, வலது கண் கண்ணாடி, இடது கண் கண்ணாடி பொறிக்கும் வேலை நடக்கும். பிறகு, கண்ணாடிக் கடைகளுக்கு வருவேன்.

எனக்குக் கவசமாக இருக்கும் ஃபிரேம்கள், ஸ்டெயின்லெஸ் கம்பிகள், அலுமினியம், பிளாஸ்டிக் என விதவிதமாகத் தயாராகின்றன. சமீப காலமாக அலுமினியம் ஆக்ஸைடு, பாலிமர் மற்றும் உதிர்ந்த பிளாஸ்டிக் துகள்களில் இருந்துகூட ஃபிரேம்கள் தயாராகின்றன.
நீங்கள், கண் டாக்டரிடம் போகிறீர்கள். அங்கே எழுத்துகள் தெரிகிறதா எனப் பரிசோதிக்க ஒரு சார்ட் இருக்கும். அதை படிக்கச் சொல்வார்கள். அதற்கு ஸ்நெல்ஸ் சார்ட் என்று பெயர். காரணம், அதைக் கண்டுபிடித்தவர், பெடர் ஸ்நெல்ஸ்.

உங்களின் பார்வைக் குறைபாடுக்கு ஏற்ப, பொருத்தமான வலது கண் லென்ஸ், இடது கண் லென்ஸ் வகைகளை டாக்டர் உங்களுக்குப் பரிந்துரை செய்வார்.. அதற்கு ஏற்ற வகையில் கண்ணாடிக் கடைக்காரர், நீங்கள் தேர்வு செய்த ஃபிரேமில் கண்ணாடியைப் பொருத்தி, சரியான கோணங்களில் லென்ஸோ மீட்டரில் வேறுபாடு செய்து, என்னை அழகாக உருவாக்கிக் கொடுப்பார்.

இப்படித்தான் நான் உன்னிடம் வந்து சேருகிறேன். கான்டாக்ட் லென்ஸ் என்று என் ஒன்றுவிட்ட சகோதரனும் இருக்கிறான். இவனை அணிய, ஃபிரேம் தேவை இல்லை. குட்டியாக பிளாஸ்டிக் ஷீட் போல இருப்பான். அதைக் கண்ணில் தினமும் பொருத்திக்கொள்ள வேண்டும்.

எந்த வகையாக இருந்தாலும் என்னைத் துடைத்து சுத்தமாகப் பராமரித்தால், நீண்ட காலம் உழைப்பேன். அத்துடன், கண்களுக்கு நன்மை பயக்கும் கீரை போன்ற உணவுகளைச் சாப்பிட்டால், என்னை அணிய வேண்டிய அவசியமே இருக்காது. செய்வீர்களா?


Read More

உலகப் பொதுமறை

© 2011 பூர்வ காவேரி, AllRightsReserved.

Designed by ScreenWritersArena